News December 30, 2024
மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிப்பு

புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் தற்காலிக தடுப்புகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் இரண்டு நாள்கள் கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில்கள், தேவாலயங்கள் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.
Similar News
News March 28, 2026
ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது: EPS

மயிலாப்பூரில் தேர்தல் பிரசாரத்தில் தான் பேசியதை பார்த்து ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக EPS கூறியுள்ளார். இதனால்தான் தனக்கு பதிலடி தருவதாக நினைத்து 3 அமைச்சர்கள் ஏதேதோ பேசியிருக்கிறார்கள் என்ற அவர், ஆனால் அவர்களால் தான் சொன்ன கருத்துக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றார். நிச்சயமாக NDA கூட்டணி வெல்லும், அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
அனிருத் – காவ்யா மாறன் திருமணம்? தகவல் கசிந்தது

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த தகவல் வைரலாகவே, ரசிகர்கள் SM-களின் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். முன்னதாக, ஆண்ட்ரியா, ஜோனிடா காந்தி ஆகியோருடன் அனிருத் கிசுகிசுக்கப்பட்டாலும், காவ்யா மாறன் உடன் திருமணம் என்பது வரை பேச்சு அடிபட்டது. இந்த தகவல்களுக்கு அனிருத் மறுப்பும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 28, 2026
வரலாறு காணாத அளவு விலை குறைந்தது

தக்காளி விலை வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளது. ஒட்டன்சத்திரம், கோயம்பேடு, மதுரை சந்தைகளில் 1 கிலோ தக்காளி ₹5-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் சில்லறை கடைகளில் கிலோ ₹8 – ₹10-க்கு தக்காளி விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரம், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கேஸ் தட்டுப்பாடால் பல ஹோட்டல்கள் குறைந்த அளவு காய்கறிகள் வாங்குவதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.


