News September 12, 2024
1 கோடி மோசடி மொபைல் இணைப்புகள் துண்டிப்பு

ஒரு கோடி மோசடி மொபைல் இணைப்புகள் இதுவரை துண்டிக்கப்பட்டு உள்ளதாக தொலை தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. SANCHAR SAATHI தளத்தில் மக்கள் அளிக்கும் புகார் அடிப்படையில் மோசடி இணைப்புகளை தொலைத்தொடர்புத்துறை துண்டித்தும், முடக்கியும் வருகிறது. அதன்படி, ஒரு கோடிக்கும் மேற்பட்ட இணைப்புகளை துண்டித்துள்ளது. மேலும், 2.27 லட்சம் மொபைல்களையும் முடக்கி உள்ளது. உங்கள் மொபைல் இணைப்பு வேலை செய்கிறதா? கமெண்ட்
Similar News
News November 28, 2025
திமுகவில் இணைய முயலவில்லை: மல்லை சத்யா

திமுகவில் இணையவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதற்கான முயற்சியை எடுக்கவில்லை என மல்லை சத்யா கூறியுள்ளார். இதற்கான காரணத்தை கூறிய அவர், திமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதால் அவர்களுக்கு எந்த குளறுபடியும் வந்துவிடக்கூடாது என கருதியதாக தெரிவித்துள்ளார். அதேநேரம், திராவிட கொள்கைக்கு எதிரான கட்சிகளுடனும், பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியிலும், சேரும் திட்டமில்லை எனவும் உறுதியாக கூறியுள்ளார்.
News November 28, 2025
2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரைநாள் லீவு!

‘டிட்வா’ புயல் எதிரொலியால் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(நவ.28) அரைநாள்(மதியம்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதலே பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
₹40,000 சம்பளத்தில் வேலை.. APPLY NOW!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி தகுதி: B.E/B.Tech, B.Pharm. வயது வரம்பு: 40. தேர்வு முறை: Written Test, Interview, Document Verification. சம்பளம்: ₹42,478. விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.25. விருப்பமுள்ளவர்கள் <


