News March 28, 2025
45 நிமிடத்திற்கு 1 குழந்தை பலி… கலங்கி நிற்கும் காசா

அழுவதற்கு கூட காசா மக்களின் கண்களில் கண்ணீர் இருக்குமா என தெரியவில்லை. அங்கு ஒவ்வொரு 45 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. போர் தொடங்கி 535 நாட்களில் ஒரு நாளைக்கு 30 குழந்தைகள் வீதம் 17,400 குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்திருக்கிறது. அதில், ஒரு வயதைக் கூட கடக்காத 825 பிஞ்சுக் குழந்தைகளும் மரணித்து இருப்பது சோகத்திலும் பெரும் சோகம்.
Similar News
News November 28, 2025
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை… வந்தது அறிவிப்பு!

நாளை தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்ததாக சற்றுமுன் செய்தி வெளியானது. அந்த தகவல் சரியல்ல என்று தமிழக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மழை நிலவரத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே விடுமுறையை அறிவிப்பார்கள் என்றும், மாநிலம் முழுவதற்குமான ஒரே அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
ஒருவரியில் EPS-க்கு பதிலடி கொடுத்த செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையத்தில் <<18410825>>பிரம்மாண்ட பரப்புரையை<<>> EPS மேற்கொள்ள உள்ளது குறித்து செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நான் என்று ஒருவன் நினைத்தால் ஆண்டவன் தான் என்று காட்டிவிடுவான்’ என ஒருவரியில் பதிலடி கொடுத்தார். 3 முறை வாக்கு கேட்காமலேயே கோபி மக்கள் தன்னை வெற்றி பெற வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கோவை ஏர்போர்ட் வந்தடைந்த KAS-க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
News November 28, 2025
பராசக்தி பட நடிகை காலமானார்

‘ஓ ரசிக்கும் சீமானே, ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ உள்ளிட்ட பாடல்களை கேட்காதவர்களும், குமாரி கமலாவின்(91) ஆட்டத்தை ரசிக்காதவர்களும் இருக்க முடியாது. 70 ஆண்டுகளுக்கு முன்பே PAN INDIA ஸ்டாராக திகழ்ந்த அவர், பராசக்தி, பாவை விளக்கு உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது நடனத்தால் பல மொழிகளில் ரசிகர்களை சம்பாதித்த கமலா, இறுதி காலத்தை அமெரிக்காவில் கழித்த நிலையில் வயது மூப்பால் காலமானார்.


