News March 28, 2025
45 நிமிடத்திற்கு 1 குழந்தை பலி… கலங்கி நிற்கும் காசா

அழுவதற்கு கூட காசா மக்களின் கண்களில் கண்ணீர் இருக்குமா என தெரியவில்லை. அங்கு ஒவ்வொரு 45 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. போர் தொடங்கி 535 நாட்களில் ஒரு நாளைக்கு 30 குழந்தைகள் வீதம் 17,400 குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்திருக்கிறது. அதில், ஒரு வயதைக் கூட கடக்காத 825 பிஞ்சுக் குழந்தைகளும் மரணித்து இருப்பது சோகத்திலும் பெரும் சோகம்.
Similar News
News December 27, 2025
செல்போனில் இதை மாற்றினால் 3 ஆண்டு ஜெயில்

செல்போன்களில் 15 இலக்க IMEI நம்பர் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் என தொலைத்தொடர்புத் துறை(DoT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை (அ) ₹50 லட்சம் அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இது தொடர்பாக செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை மையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களும் இந்த விவகாரத்தில் உஷாராக இருங்கள்.
News December 27, 2025
பேரிடர்களால் ₹10.77 லட்சம் கோடி இழப்பு

2025-ல் இயற்கை பேரிடர்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. வெப்ப அலைகள், காட்டுத் தீ, வெள்ளம் ஆகியவையால் ₹10.77 லட்சம் கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டதாக, காப்பீடு செய்யப்பட்ட இழப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. இந்த துயரங்களுக்கு, புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டால் ஏற்படும் காலநிலை மாற்றமே காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கலிபோர்னியா காட்டுத் தீயால் மட்டும் ₹5.38 லட்சம் கோடி இழப்பு.
News December 27, 2025
BREAKING: கூட்டணி முடிவை தெரிவித்தார் அன்புமணி

திமுக ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் தைலாபுரம் உள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் 2026 தேர்தலில் திமுக நிச்சயம் தோற்கடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், NDA-வில் பாமக இடம்பெறுமா என்பது குறித்து போகப்போக தெரியும் என்றும், பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து 2 வாரங்களில் தெரிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


