News March 28, 2025

45 நிமிடத்திற்கு 1 குழந்தை பலி… கலங்கி நிற்கும் காசா

image

அழுவதற்கு கூட காசா மக்களின் கண்களில் கண்ணீர் இருக்குமா என தெரியவில்லை. அங்கு ஒவ்வொரு 45 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. போர் தொடங்கி 535 நாட்களில் ஒரு நாளைக்கு 30 குழந்தைகள் வீதம் 17,400 குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்திருக்கிறது. அதில், ஒரு வயதைக் கூட கடக்காத 825 பிஞ்சுக் குழந்தைகளும் மரணித்து இருப்பது சோகத்திலும் பெரும் சோகம்.

Similar News

News December 23, 2025

பலமுறை கமிஷன் வாங்கி இருக்கேன்: மத்திய அமைச்சர்

image

பிஹாரில் MP, MLA-க்கள் அனைவரும் கமிஷன் வாங்குவதாக மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமிஷன் வாங்குவது ரகசியமில்லை எனக்கூறிய அவர், தானே பலமுறை கமிஷன் வாங்கி, அந்த பணத்தை கட்சி நிதிக்கும் அளித்துள்ளதாக தெரிவித்தார். தொகுதி மேம்பாட்டு நிதியில் குறைந்தபட்சம் 5% ஆவது கமிஷன் பெற அட்வைஸ் செய்தது, அவர் இடம்பெற்றுள்ள பாஜக கூட்டணியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 23, 2025

இறந்தவர் உயிருடன் வந்தார்.. அதிர்ச்சி தகவல்

image

SIR திருத்ததிற்கு பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் உயிரிழந்தவரின் பெயர் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. 2021-ல் உயிரிழந்த பாடலாசிரியரும், அதிமுக Ex. அவை தலைவருமான புலமைப்பித்தனுக்கு மயிலாப்பூரில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், SIR பணிகளை அவசரமாக நடத்தினால் குளறுபடிகள் நடக்கும் என்பது உறுதியாகியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் ஓட்டு பத்திரமா இருக்கா?

News December 23, 2025

நாட்டில் அதிக கடன் வாங்கிய மாநிலம் இதுதான்!

image

2025-26-ல் இந்தியாவில் எந்த மாநிலம் அதிக கடனில் உள்ளது என்ற லிஸ்ட்டை வெளியிடப்பட்டுள்ளது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை விட அம்மாநிலங்களின் கடன் அதிகமாக இருப்பது குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். கடன் சுமையில் எந்த மாநிலம் முதல் இடத்தில் உள்ளது, தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்யவும்.

error: Content is protected !!