News March 28, 2025

45 நிமிடத்திற்கு 1 குழந்தை பலி… கலங்கி நிற்கும் காசா

image

அழுவதற்கு கூட காசா மக்களின் கண்களில் கண்ணீர் இருக்குமா என தெரியவில்லை. அங்கு ஒவ்வொரு 45 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. போர் தொடங்கி 535 நாட்களில் ஒரு நாளைக்கு 30 குழந்தைகள் வீதம் 17,400 குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்திருக்கிறது. அதில், ஒரு வயதைக் கூட கடக்காத 825 பிஞ்சுக் குழந்தைகளும் மரணித்து இருப்பது சோகத்திலும் பெரும் சோகம்.

Similar News

News December 25, 2025

கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டுமா?

image

உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா? கவலை வேண்டாம். ரிசர்வ் வங்கி விதிகளின்படி, அழுக்கடைந்த, லேசாக கிழிந்த மற்றும் 2 துண்டுகளாக கிழிந்த நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம். புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும். காந்தி படம், ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் இல்லாமல் இருந்தால், அந்த நோட்டின் மதிப்பில் ஒரு பகுதி மட்டுமே வழங்கப்படும். இதற்கு எந்த படிவத்தையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை.

News December 25, 2025

பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரத்தை வணங்குகிறேன்: EPS

image

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவுநாளில் EPS புகழஞ்சலி செலுத்தியுள்ளார். ஒப்பற்ற துணிவுடனும், நிகரில்லா விவேகத்துடனும் அந்நிய ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பெரும்படை திரட்டிய முதல் பெண் விடுதலைப் போராளி; தமிழினப் பெண்களின் வீரத்திற்கு சான்றாக திகழும் நம் பெரும்பாட்டியார், பேரரசி வீரமங்கை வேலுநாச்சியாரின் தியாகத்தையும், தேச பக்தியையும் போற்றி வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 25, 2025

இந்த Dress-ஆல் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து

image

குழந்தைகளுக்கு Fancy ஆன, அழகழகான ஆடைகளை வாங்கினால் மட்டும் போதாது. அந்த உடைகள் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா என்பதை பெற்றோர்கள் ஆராய வேண்டும். 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு பட்டன் வைத்த சட்டைகளை அணிவிக்க வேண்டாம். அவர்கள் அதை வாயில் வைத்து கடிக்கும்போது அதிலிருக்கும் பட்டன்கள் தொண்டைக்குள் சிக்கலாம். இது மூச்சுத்திணறலை ஏற்படுத்தி அவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். SHARE.

error: Content is protected !!