News March 28, 2025
45 நிமிடத்திற்கு 1 குழந்தை பலி… கலங்கி நிற்கும் காசா

அழுவதற்கு கூட காசா மக்களின் கண்களில் கண்ணீர் இருக்குமா என தெரியவில்லை. அங்கு ஒவ்வொரு 45 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. போர் தொடங்கி 535 நாட்களில் ஒரு நாளைக்கு 30 குழந்தைகள் வீதம் 17,400 குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்திருக்கிறது. அதில், ஒரு வயதைக் கூட கடக்காத 825 பிஞ்சுக் குழந்தைகளும் மரணித்து இருப்பது சோகத்திலும் பெரும் சோகம்.
Similar News
News December 20, 2025
தனியார் பள்ளிகளில் வரும் மாற்றம்.. அரசு புதிய அறிவிப்பு

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தனியார் பள்ளிகளில் கண்டிப்பாக காலை வணக்க கூட்டம் நடத்த வேண்டும் எனவும் தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண்ணை மாணவர்களே பாட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒலிப்பெருக்கி மூலம் பாடல்களை ஒலிப்பரப்பக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை என்பதால் திங்கள் முதல் இது நடைமுறைக்கு வரும் என வாய்ப்புள்ளது.
News December 20, 2025
இந்தியாவை ரிஷிகள்தான் உருவாக்கினார்கள்: RN ரவி

வடமாநிலங்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி தென் மாநிலத்தவர்கள் குறைவாக தெரிந்துவைத்துள்ளனர் என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். ‘தமிழ் கற்கலாம்’ நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழை கற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்திய அவர், மொழியால் மக்களுக்குள் இருக்கும் சுவற்றை உடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியாவை அரசர்கள் உருவாக்கவில்லை எனவும் ரிஷிகள்தான் உருவாக்கினார்கள் என்றும் பேசியுள்ளார்.
News December 20, 2025
உங்களுக்கு இரண்டு இதயம் இருக்கு தெரியுமா?

கெண்டைக்கால் தசைகள், குறிப்பாக சோலியஸ் தசை தான் நமது உடலில் உள்ள 2-வது இதயம் என அழைக்கப்படுகிறது. இதயத்தில் இருந்து வெளியேற்றப்படும் ரத்தம், புவி ஈர்ப்பு விசையால் கால்களில் தேங்கிவிடாமல் உடல் முழுக்க சீராக அனுப்பும் பணியை இது செய்கிறது. இதனால், இதயத்தின் வேலைப்பளு குறைவதோடு, அதன் ஆயுளும் நீள்கிறது. எனவே, இந்த 2ம் இதயம் சீராக இயங்க உடற்பயிற்சி செய்வது அவசியமாகிறது. SHARE.


