News March 28, 2025

45 நிமிடத்திற்கு 1 குழந்தை பலி… கலங்கி நிற்கும் காசா

image

அழுவதற்கு கூட காசா மக்களின் கண்களில் கண்ணீர் இருக்குமா என தெரியவில்லை. அங்கு ஒவ்வொரு 45 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. போர் தொடங்கி 535 நாட்களில் ஒரு நாளைக்கு 30 குழந்தைகள் வீதம் 17,400 குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்திருக்கிறது. அதில், ஒரு வயதைக் கூட கடக்காத 825 பிஞ்சுக் குழந்தைகளும் மரணித்து இருப்பது சோகத்திலும் பெரும் சோகம்.

Similar News

News December 24, 2025

பொங்கல் பரிசுத்தொகை.. அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

image

பொங்கல் பரிசுத்தொகுப்பு & தொகையை ரேஷன் அட்டைதாரர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதனிடையே, ₹2,500 ரொக்கப்பரிசு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகை பற்றி இப்போது சொல்ல மாட்டோம், அது ரகசியமாகத் தான் இருக்கும், திடீரென்று தான் அறிவிப்போம் என அமைச்சர் ரகுபதி சஸ்பென்ஸ் வைத்துள்ளார். இதனால் மிக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

News December 24, 2025

முருங்கை இலையை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா?

image

இயற்கையில் மருத்துவ குணங்கள் நிறைந்த மரமாக முருங்கை மரம் கருதப்படுகிறது. தினமும் 5-7 முருங்கை இலைகளை மென்று சாப்பிடுவது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, சருமம் மற்றும் தலைமுடி பொழிவு பெறுகிறது. அதோடு வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது.

News December 24, 2025

தவெக ஒரு பெரிய கட்சியே அல்ல: சரத்குமார்

image

தன்னை பொறுத்தவரை தவெக ஒரு பெரிய கட்சியே அல்ல என்று சரத்குமார் கூறியுள்ளார். தனது கருத்துக்களையும் கொள்கைகளையும் விஜய் மக்களிடம் கூறி தேர்தலை சந்திக்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கு உள்ள ₹10 லட்சம் கோடி கடனை எப்படி அடைக்கப் போகிறார் என்பதை விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக, விஜய்யை அரசியல்வாதியாக தான் ஏற்கவில்லை என சரத்குமார் கூறியிருந்தார்.

error: Content is protected !!