News March 28, 2025
45 நிமிடத்திற்கு 1 குழந்தை பலி… கலங்கி நிற்கும் காசா

அழுவதற்கு கூட காசா மக்களின் கண்களில் கண்ணீர் இருக்குமா என தெரியவில்லை. அங்கு ஒவ்வொரு 45 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. போர் தொடங்கி 535 நாட்களில் ஒரு நாளைக்கு 30 குழந்தைகள் வீதம் 17,400 குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்திருக்கிறது. அதில், ஒரு வயதைக் கூட கடக்காத 825 பிஞ்சுக் குழந்தைகளும் மரணித்து இருப்பது சோகத்திலும் பெரும் சோகம்.
Similar News
News March 31, 2025
ஏன் 9வது வரிசையில் வருகிறார் தோனி?

CSK என்றால் தோனி தான் என்ற நிலை மாறி, பல CSK ஃபேன்ஸ் அவர் மீது ஆதங்கத்தைக் கொட்ட தொடங்கிவிட்டனர். தோனிக்கு மேனேஜ்மென்ட் கொடுத்த சுதந்திரத்தால் தான் அவர், 9வது வரிசையில் களமிறங்குகிறார் என்கின்றனர் சிலர். பயிற்சியாளர் ஃப்ளெமிங், தோனிக்கு முன்பு இருந்ததை போல, உடல் ஒத்துழைக்காததால், அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது என்கிறார். நடப்பு தொடரில் CSK பேட்டிங்கில் தடுமாறுவதை காண முடிகிறது தானே?
News March 31, 2025
கள்ளநோட்டு விவகாரம்: விசிக நிர்வாகி செல்வம் நீக்கம்

கள்ளநோட்டு விவகாரத்தில் சிக்கிய விசிகவின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் பரம.செல்வம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திட்டக்குடி அருகே உள்ள அதர்நத்தம் கிராமத்தில் செல்வத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்து ₹85,000 கள்ளநோட்டுகள், பிரிண்டிங் மெஷின், பணம் எண்ணும் இயந்திரங்கள், போலீஸ் சீருடைகள், பிஸ்டல் ஏர்கன் உள்ளிட்ட பொருட்களை போலீசார் இன்று காலை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
News March 31, 2025
₹800 பீஸ்-காக பறிபோன பள்ளி மாணவியின் உயிர்!

உ.பி.யின் பிரதாப்கர் மாவட்டத்தில் ₹800 செலுத்தாததால் 9 ஆம் வகுப்பு மாணவியை, பள்ளி நிர்வாகம் ஒரு தேர்வை எழுத அனுமதிக்கவில்லை. இதனால், மனமுடைந்து போன அம்மாணவி, வீட்டில் யாரும் இல்லாத போது, தற்கொலை செய்து கொண்டுள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியர், மேனேஜர் மற்றும் ஆபிசர் ஆகியோர் தனது மகளை அவமானப்படுத்தியதாக தாயார் குற்றம் சாட்டியுள்ளார். மனதில் கொள்ளுங்கள் மரணம் எதற்கும் முடிவல்ல!