News March 28, 2025

45 நிமிடத்திற்கு 1 குழந்தை பலி… கலங்கி நிற்கும் காசா

image

அழுவதற்கு கூட காசா மக்களின் கண்களில் கண்ணீர் இருக்குமா என தெரியவில்லை. அங்கு ஒவ்வொரு 45 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. போர் தொடங்கி 535 நாட்களில் ஒரு நாளைக்கு 30 குழந்தைகள் வீதம் 17,400 குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்திருக்கிறது. அதில், ஒரு வயதைக் கூட கடக்காத 825 பிஞ்சுக் குழந்தைகளும் மரணித்து இருப்பது சோகத்திலும் பெரும் சோகம்.

Similar News

News December 22, 2025

கள்ளக்குறிச்சி வாக்காளர்களே சூப்பர் UPDATE!

image

கள்ளக்குறிச்சி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News December 22, 2025

விஜய் கட்சியின் டெபாசிட் காலி: அர்ஜுன் சம்பத்

image

ஈரோட்டில் விஜய் நடத்திய பொதுக்கூட்டம் படுதோல்வி அடைந்ததாக அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். கொங்கு மண்டலத்தில் உள்ள 70 தொகுதிகளிலும் தவெக டெபாசிட் இழக்கும் எனக் குறிப்பிட்ட அவர், திமுகவின் Toolkit ஆக விஜய் செயல்படுகிறார் என்றும் அவர் சாடியுள்ளார். ஒவ்வொரு தேர்தலுக்கும் திமுக ஒரு நடிகரை களமிறக்கும், அந்த வகையில் மற்றொரு மக்கள் நீதி மய்யமாக(கமல்) விஜய்யின் தவெக கட்சி இயங்குவதாகவும் கூறியுள்ளார்.

News December 22, 2025

பாஜக, RSS சதியை தடுக்க வேண்டும் : மாணிக்கம் தாகூர்

image

மதுரையை மையமாகக் கொண்டு தமிழகத்தில் மதவெறி அரசியலைத் தூண்ட பாஜக, RSS சதி செய்வதாக காங்., MP மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். இதை தடுக்க வேண்டியது தமிழர்களின் கடமை எனக் கூறிய அவர், தமிழருவி மணியன் மறைமுகமாக பாஜக, RSS-க்கு வேலை பார்ப்பவர். தற்போது ஜி.கே.வாசனுடன் சேர்ந்துள்ளார். அவர் சேர்ந்த இடம் வெற்றிபெற்றதே இல்லை என்று விமர்சித்துள்ளார்

error: Content is protected !!