News March 28, 2025

45 நிமிடத்திற்கு 1 குழந்தை பலி… கலங்கி நிற்கும் காசா

image

அழுவதற்கு கூட காசா மக்களின் கண்களில் கண்ணீர் இருக்குமா என தெரியவில்லை. அங்கு ஒவ்வொரு 45 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. போர் தொடங்கி 535 நாட்களில் ஒரு நாளைக்கு 30 குழந்தைகள் வீதம் 17,400 குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்திருக்கிறது. அதில், ஒரு வயதைக் கூட கடக்காத 825 பிஞ்சுக் குழந்தைகளும் மரணித்து இருப்பது சோகத்திலும் பெரும் சோகம்.

Similar News

News December 17, 2025

ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட்டா? நிம்மதி தரும் மாற்றம்

image

வெயிட்டிங் லிஸ்ட் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்ய, ரயில்வே சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, காலை 5 – மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான Chart, முந்தைய நாள் இரவு 8 மணிக்கு தயார் செய்யப்படும். மதியம் 2:01 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரையிலான ரயில்களுக்கு, 10 மணி நேரத்திற்கு முன்பு தயாரிக்கப்படும். முன்னதாக, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே இது தயாரிக்கப்பட்டது.

News December 17, 2025

டெல்லி காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த SC உத்தரவு

image

டெல்லியில் பெருகிவரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், SC பழைய வாகனங்கள் தொடர்பாக புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, “நகர நுழைவாயில்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சுங்கச்சாவடிகளை தற்காலிகமாக நீக்க வேண்டும். BS‑IV & அதற்கும் மேற்பட்ட வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நீண்டகால திட்டம் வகுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

News December 17, 2025

சற்றுமுன்: நாடு முழுவதும் பறந்தது உத்தரவு

image

நாடு முழுவதும் பால் & பால் பொருள்களில் கலப்படம் நடப்பதை தடுக்க சிறப்பு அமலாக்க பணியை தொடங்க, அனைத்து மாநில அரசுகளுக்கும் FSSAI உத்தரவிட்டுள்ளது. பனீர், கோவா ஆகியவற்றில் நடக்கும் கலப்படம் & தவறான பிராண்டிங் குறித்து ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் பால் பொருள்கள் தயாரிக்கப்படுவதாக புகார்கள் வந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!