News March 28, 2025
45 நிமிடத்திற்கு 1 குழந்தை பலி… கலங்கி நிற்கும் காசா

அழுவதற்கு கூட காசா மக்களின் கண்களில் கண்ணீர் இருக்குமா என தெரியவில்லை. அங்கு ஒவ்வொரு 45 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. போர் தொடங்கி 535 நாட்களில் ஒரு நாளைக்கு 30 குழந்தைகள் வீதம் 17,400 குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்திருக்கிறது. அதில், ஒரு வயதைக் கூட கடக்காத 825 பிஞ்சுக் குழந்தைகளும் மரணித்து இருப்பது சோகத்திலும் பெரும் சோகம்.
Similar News
News December 28, 2025
டெஸ்ட் அணிக்கு VVS லட்சுமணன் பயிற்சியாளரா?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக VVS லட்சுமணனை BCCI நியமிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் அது உண்மையல்ல, அவை ஆதாரமற்றவை என பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா தெரிவித்துள்ளார். டெஸ்ட் அணியின் பயிற்சித் தலைமையில் மாற்றம் செய்வது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் கம்பீரே 3 பார்மெட்டிலும் கோச்சாக தொடர்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
News December 28, 2025
ஆபரேஷன் சிந்தூர்: ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ஏற்பட்ட சேதங்களை இதுவரை மறுத்து வந்த பாகிஸ்தான், முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. தாக்குதலில், பாக்.,-கின் நூர் கான் விமானப்படை தளம், முக்கிய ராணுவ நிலைகள் பலத்த சேதமடைந்ததாக அந்நாட்டின் துணை பிரதமர் இஷாக் தார் தெரிவித்துள்ளார். 80-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை கொண்டு இந்தியா நடத்திய தாக்குதலில், வீரர்கள் பலர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
News December 28, 2025
பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு புதிய உத்தரவு

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே மூன்றாம் பருவ புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. பாடநூல் கழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனை பள்ளி வாரியாக பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், ஒவ்வொரு பள்ளிக்கும் எத்தனை புத்தகங்கள் வந்திருக்கிறது என எமிஸ் தளத்தில் உடனே அப்டேட் செய்யவும் HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


