News April 27, 2025
32,438 பணியிடங்களுக்கு 1.8 கோடி பேர் விண்ணப்பம்!

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 32,438 Group-D பணியிடங்களுக்கு 1.8 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், 1 பணியிடத்திற்கு 3,329 பேர் மல்லுகட்டுகின்றனர். இது, நாட்டின் வேலைவாய்ப்பின்மையின் அவலம் என எதிர்க்கட்சியினரும், அரசு வேலையின் மீதுள்ள மோகம் என ஒரு தரப்பினரும் விமர்சிக்கின்றனர். எது எப்படியோ மே (அ) ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுக்குத் தேர்வர்கள் சிறப்பாக தயாராகுங்கள். ALL THE BEST..
Similar News
News September 18, 2025
இன்று SL vs AFG: சூப்பர் 4-க்கு தகுதி பெறப்போவது யார்?

ஆசிய கோப்பை தொடரில் இன்று SL vs AFG அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதியாகும் என்பதால், ஆஃப்கன் கடுமையாக போராடும். அதேவேளையில், தோல்வியை தவிர்க்க இலங்கை முயற்சிக்கும். ஆஃப்கன் இதுவரை 2 போட்டிகளில் ஒன்றிலும், இலங்கை இரண்டிலும் (NRR 1.54) வென்றுள்ளது. ஒருவேளை ஆஃப்கன் அணி தோற்றால், வங்கதேச அணி ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெறும்.
News September 18, 2025
நடிகர் ரோபோ சங்கர் ICU-க்கு மாற்றம்

நேற்றைய படப்பிடிப்பின் போது <<17736001>>ரோபோ சங்கர் <<>>திடீரென மயங்கி விழுந்ததால், ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், ICU-விற்கு மாற்றப்பட்டுள்ளார். டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் குணமடைய வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு மெல்ல, மெல்ல குணமாகி வந்த நிலையில், தற்போது இப்படி ஏற்பட்டுள்ளது.
News September 18, 2025
இனி பாக்.,-ஐ தொட்டால் சவுதி வரும்!

பாகிஸ்தான் – சவுதி இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய 9 நாள்களில், இந்தியா – பாக்., போர் நடந்த சில நாள்களில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது பொதுவான தாக்குதலாக கருதப்பட்டு எதிர் தாக்குதல் நடத்தப்படும். இருப்பினும் இந்தியா உடனான உறவு அப்படியே நீடிக்கும் என்று சவுதி கூறியுள்ளது.