News April 27, 2025
32,438 பணியிடங்களுக்கு 1.8 கோடி பேர் விண்ணப்பம்!

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 32,438 Group-D பணியிடங்களுக்கு 1.8 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், 1 பணியிடத்திற்கு 3,329 பேர் மல்லுகட்டுகின்றனர். இது, நாட்டின் வேலைவாய்ப்பின்மையின் அவலம் என எதிர்க்கட்சியினரும், அரசு வேலையின் மீதுள்ள மோகம் என ஒரு தரப்பினரும் விமர்சிக்கின்றனர். எது எப்படியோ மே (அ) ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுக்குத் தேர்வர்கள் சிறப்பாக தயாராகுங்கள். ALL THE BEST..
Similar News
News December 5, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக குறைந்தது. இன்று(டிச.5) 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹20 குறைந்து ₹12,000-க்கும், சவரன் ₹160 குறைந்து ₹96,000-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹320 குறைந்த நிலையில், இன்று மீண்டும் சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் நிலவும் மந்த நிலையே தங்கம் விலை சரிவுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 5, 2025
ஆரம்ப கால ஜெயலலிதாவின் அரிய PHOTOS

மறைந்த Ex CM ஜெ.ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.5) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அவரது ஆரம்பகால அரசியல் வாழ்கையை, அதிமுகவினர், புகைப்படங்களாக பகிர்ந்து நினைவுகூர்ந்துள்ளனர். இதுதொடர்பான சில போட்டோக்களை, மேலே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.
News December 5, 2025
கைதாகும் ஷேக் ஹசீனாவின் மகன்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வஜித் ஜாய்க்கு எதிராக, அந்நாட்டின் குற்றவியல் தீர்ப்பாயம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம் வெடித்த போது, இணைய சேவைகளை தடைசெய்த குற்றத்துக்காக இந்நடவடிக்கையை எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இதே வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


