News April 27, 2025
32,438 பணியிடங்களுக்கு 1.8 கோடி பேர் விண்ணப்பம்!

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 32,438 Group-D பணியிடங்களுக்கு 1.8 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், 1 பணியிடத்திற்கு 3,329 பேர் மல்லுகட்டுகின்றனர். இது, நாட்டின் வேலைவாய்ப்பின்மையின் அவலம் என எதிர்க்கட்சியினரும், அரசு வேலையின் மீதுள்ள மோகம் என ஒரு தரப்பினரும் விமர்சிக்கின்றனர். எது எப்படியோ மே (அ) ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுக்குத் தேர்வர்கள் சிறப்பாக தயாராகுங்கள். ALL THE BEST..
Similar News
News November 10, 2025
மற்றொரு திமுக தலைவரின் பதவி பறிப்பு

சங்கரன்கோவில், <<18079595>>திட்டக்குடி<<>> வரிசையில் கிருஷ்ணகிரி நகராட்சியின் சேர்மனும் பதவியை இழந்துள்ளார். திமுகவை சேர்ந்த பரிதா நவாப்புக்கு எதிராக சொந்த கட்சியின் கவுன்சிலர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. திமுகவில், பல இடங்களில் உள்கட்சி பூசல் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் அடுத்தடுத்த பதவியிழப்பு சம்பவங்கள் தலைமைக்கு தலைவலியை கொடுத்துள்ளன.
News November 10, 2025
வடசென்னை பார்த்து வருந்தினேன்: நடிகர் கிஷோர்

நடிக்கும்போது தான் கண்டு வியந்த காட்சிகள் எதுவும் ‘வடசென்னை’ படத்தில் இடம்பெறாததால் வருத்தப்பட்டதாக நடிகர் கிஷோர் தெரிவித்துள்ளார். ஆனால், ‘அரசன்’ படத்தில் வடசென்னையின் செந்திலாக இடம்பெற விரும்புவதாகவும், வெற்றிமாறனின் அழைப்புக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வடசென்னை 1-ல் சேர்க்கப்படாத Footage-களை வெற்றிமாறன் ரிலீஸ் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
News November 10, 2025
விவசாயத்தில் நல்ல லாபம் பார்க்கணுமா? இதோ வழி!

பயிர்களை இடைத்தரகர்கள் இல்லாமல், நேரடியாக விற்பனை செய்ய இ-நாம் (e-NAM) அரசு செயலி உதவுகிறது. இதன்மூலம் லாபம் முழுவதும் விவசாயிகளுக்கே செல்லும். இதற்கு இச்செயலியில் நீங்கள் அறுவடை செய்த பயிரின் தகவலை உள்ளிடவேண்டும். ஒருவேளை நீங்கள் விவசாயி இல்லையெனில், செயலியில் வர்த்தகராக பதிவு செய்யலாம். விவசாயிகளிடமிருந்து பயிர்களை வாங்கி, அதை உணவு நிறுவனங்கள்/ சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்கலாம். SHARE.


