News April 27, 2025
32,438 பணியிடங்களுக்கு 1.8 கோடி பேர் விண்ணப்பம்!

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 32,438 Group-D பணியிடங்களுக்கு 1.8 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், 1 பணியிடத்திற்கு 3,329 பேர் மல்லுகட்டுகின்றனர். இது, நாட்டின் வேலைவாய்ப்பின்மையின் அவலம் என எதிர்க்கட்சியினரும், அரசு வேலையின் மீதுள்ள மோகம் என ஒரு தரப்பினரும் விமர்சிக்கின்றனர். எது எப்படியோ மே (அ) ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுக்குத் தேர்வர்கள் சிறப்பாக தயாராகுங்கள். ALL THE BEST..
Similar News
News December 25, 2025
ராசி பலன்கள் (25.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 25, 2025
‘பாரத் டாக்ஸி’ vs ஓலா, உபேர் என்ன வித்தியாசம்?

<<18661900>>‘பாரத் டாக்ஸி’<<>> சேவையை முதற்கட்டமாக டெல்லியில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதில் டிராக்கிங், 24*7 கஸ்டமர் சர்வீஸ், பல இந்திய மொழிகளில் சேவை வழங்கப்பட உள்ளது. அதேபோல் ola, Uber போன்ற தனியார் நிறுவனங்களை போல் இல்லாமல், டெல்லி போலீசுடன் இணைந்து டிரைவர், பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேலும், கமிஷன் ஏதும் வசூலிக்காமல், மொத்த பயண கட்டணமும் டிரைவருக்கு போய் சேரும்.
News December 25, 2025
இந்தியாவுடன் அமைதி.. PAK-க்கு ஆயுதம்: சீனாவின் ராஜதந்திரம்

எல்லையில் பதற்றத்தை குறைத்து, இந்தியா உடனான உறவை மேம்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாக US ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேவேளையில், FC-31, JF-17 போர் விமானங்கள் மற்றும் பிற நவீன விமானங்களை வழங்கி பாகிஸ்தானுடன் ராணுவ உறவை மேம்படுத்தவும் சீனா முடிவு செய்துள்ளதாம். இருப்பினும், கடந்த கால கசப்பான அனுபவங்களை மனதில் வைத்து சீனாவுடன் எச்சரிக்கையுடன் உறவை பேண இந்தியா நினைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


