News April 22, 2024
அயோத்தி ராமர் கோயிலில் 1.50 கோடி பேர் தரிசனம்

அயோத்தி ராமர் கோயிலில் கடந்த 3 மாதத்தில் 1.50 கோடி பேர் தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அயோத்தி கோயில் ஜனவரி மாதம் 22ஆம் தேதி திறக்கப்பட்டது. அதையடுத்து அங்கு நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நாள்தோறும் கோயிலுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவதாகவும், இதுவரை 1.50 பேர் தரிசனம் செய்திருப்பதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 3, 2026
யார் இந்த வேலுநாச்சியார்?

வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதிக்கு ஒரே மகளாக 1730-ல் பிறந்தார். தனது கணவர் மறைவையடுத்து, ஆங்கிலேயரிடம் இருந்து சிவகங்கையை 1780-ல் மீட்டெடுத்தார். இதனால் இந்தியாவின் முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை என அழைக்கப்படுகிறார். 2008-ல் மத்திய அரசு நினைவு அஞ்சல் தலை வெளியிட்டு இந்த வீரமங்கையை பெருமைப்படுத்தியது.
News January 3, 2026
டிமாண்டை மேலும் அதிகரித்த காங்கிரஸ்

திமுகவிடம் 38 சீட்களை கேட்பதோடு 3 அமைச்சர் பதவிகளையும் காங்கிரஸ் டிமாண்ட் செய்வதாக தகவல் கசிந்துள்ளது. இதை கொடுத்தால் மட்டுமே கூட்டணி எனவும், குறைந்தபட்சம் வாய்வார்த்தையாக ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்து ஆலோசனை நடத்த மல்லிகார்ஜுன கார்கேவை, ப.சிதம்பரம் கூடிய விரைவில் சந்திக்க உள்ளதாக பேசப்படுவதால் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
News January 3, 2026
திருமணத்திற்கு முன் SEX வைத்தால் சிறை தண்டனை!

திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்தால் குற்றம் என்ற சட்டம் இந்தோனேசியாவில் அமலுக்கு வந்துள்ளது. 2023-ல் அதிபரால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மசோதா, தற்போது சட்டமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருமணத்திற்கு முன்பு ஒன்றாக வாழ்ந்தால் 6 மாத சிறைத் தண்டனையும், திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்தால் 1 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். ஆனால், இது ஒருவரின் தனியுரிமைகளை மீறுவதாக ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது.


