News November 17, 2024
1.5 கோடி மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இலங்கை கடற்படையினரும், கல்பிட்டியா போலீசாரும் இணைந்து முசல்பிட்டியா பகுதியில் நடத்திய சோதனையில், 18 சாக்கு மூட்டைகளில் இருந்த 4 லட்சத்து 42,680 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.1.50 கோடி என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 23, 2025
ராமநாதபுரம்: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

ராமநாதபுரம் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க<
News August 23, 2025
ராமநாதபுரத்தில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News August 23, 2025
நான் முதல்வன் திட்டத்தில் 123 மாணவர்கள் உயர் கல்வி பயன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி துறை, வேலைவாய்ப்பு துறை சார்பில் நான் முதல்வன்- உயர்வுக்கு படி திட்ட 3 சிறப்பு முகாம்கள் நடந்துள்ளன. கடந்த 2 சிறப்பு முகாம்கள் மூலம் 110 மாணவ, மாணவியர் உயர் கல்வியில் சேர்ந்து பயன் பெற்றுள்ளனர். நேற்றைய (ஆக.22) முகாமில் 123 மாணவ, மாணவியர் பங்கேற்று 79 மாணவ, மாணவியர் பயன் பெற்றுள்ளனர். என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.