News February 6, 2025
1.37 கோடி மோசடி வழக்கில் இடைத்தரகர் கைது

தேனி மாவட்டத்தில், 21 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 1.37 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மகாலட்சுமி, பாலமுருகன், நாகேந்திரகுமார் ஆகியோரை கடந்த நவம்பரில் கைது செய்தனர். விசாரணையில் கண்ணன் என்பவர் இவர்களுக்கு இடைத்தரகராக செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கண்ணனை நேற்று (பிப்.5) கைது செய்தனர்.
Similar News
News August 20, 2025
தேனியில் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் ஆக.22 அன்று காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
தேனி இளைஞர்களே.. நீதிமன்ற வேலை..! உடனே APPLY

தேனி இளைஞர்களே.., தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி (B.E/M.E உட்பட) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள் உயர்நீதிமன்ற <
News August 20, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்:

தேனி மாவட்ட அணைகளின் (ஆக.20) நீர்மட்டம்: வைகை அணை: 69.59 (71) அடி, வரத்து: 802 க.அடி, திறப்பு: 969 க.அடி, பெரியாறு அணை: 135.20 (142) அடி, வரத்து: 2001 க.அடி, திறப்பு: 1000 க.அடி, மஞ்சளார் அணை: 38.80 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 46.14 (126.28) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 49.90 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.