News March 27, 2025
1 லட்சம் பரிசு பெற்ற சிவகங்கை மாணவி

சிவகங்கை மாவட்டத்தில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சண்முக ஷாலினிக்கு பரிசுத் தொகையாக 1 லட்சம் ரூபாயை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி கல்வித்துறை செயலர், தொடக்க கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
Similar News
News October 30, 2025
சிவகங்கை: டிஜிட்டல் கைது; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

“டிஜிட்டல் கைது” என்று மிரட்டும் அழைப்புகள் போலியானவை. யாருக்கும் டிஜிட்டல் கைது அதிகாரம் இல்லை. போலி போலீஸ்,சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி பணம் கேட்பது, “உயர் நீதிமன்ற உத்தரவு”, “வங்கி முடக்கம்” என்று மிரட்டி பணம் கேட்பவர்களைப் புறக்கணிக்கவும், தனிப்பட்ட வங்கி தகவல்கள் பகிர வேண்டாம், பணம் அனுப்ப வேண்டாம், மோசடி அழைப்புகள் வந்தால் 1930 சைபர் கிரைக்கு புகாரளிக்க சிவகங்கை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News October 29, 2025
சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளுக்கு அறிவிப்பு

நவம்பர் மாதம் 7,8,9,10,12,14,15,16 ம் தேதிகளில் ராமேஸ்வரம் மற்றும் மானாமதுரை இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட நாட்களில் வண்டி எண் 56713/ 56714 மதுரை ராமேஸ்வரம் மதியம் பேசஜ்சர் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. 16849/50 திருச்சி ராமேஸ்வரம் முன்பதிவு இல்லாத விரைவு ரயில் மானாமதுரை வரை மட்டுமே இயங்கும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
News October 29, 2025
சிவகங்கையில் நாளை இங்கெல்லாம் மின்தடை.!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி துணை மின் நிலையத்தின் 11KV கண்ணமங்கலபட்டி பீடரில் (அக்-30) நாளை காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுவதால் கண்ணமங்கலபட்டி, குமரிப்பட்டி, சாத்திணிப்பட்டி, பருகுபட்டி, காப்பாரப்பட்டி, நாட்டார்மங்கலம், அரசன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ஜான் எஃப் கென்னடி தெரிவித்துள்ளார்.


