News March 25, 2025

1 மணி நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு

image

சென்னையில், கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 7 இடங்களில் செயின் பறிப்புகள் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி MRC மைதானம் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு, வேளச்சேரி டான்சி நகரில் 2 இடங்களில் செயின் பறிப்பு, திருவான்மியூர் இந்திரா நகரில் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு என காலை 6 முதல் 7 மணிக்குள் 15 சவரன் நகைக்குள் மேல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

Similar News

News March 28, 2025

IPL: சேப்பாக்கத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்

image

ஐ.பி.எல். போட்டியையொட்டி, சேப்பாக்கத்தில் இன்றிரவு 7 மணி – 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விக்டோரியா விடுதி சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே வாகனங்களுக்கு அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும். ரத்னா கஃபேவில் இருந்து மெரினா காமராஜர் சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்படும்.

News March 28, 2025

நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கம்

image

சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டி நடப்பதையொட்டி, இன்று (மார்.28) நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனைக்கும், விமான நிலையத்திற்கு கடைசி மெட்ரோ இயக்கப்படும். ஐ.பி.எல். போட்டி நடப்பதையொட்டி, மெட்ரோ ரயிலில் ரசிகர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2025

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு

image

தெற்கு ரயில்வேயின் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு, ரயில்வேயில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்றுவிப்பாளர், இன்ஜினியர் (JE) ஆகிய பதவிகளில் 20 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள 65 வயதுக்கு உட்பட்டவர்கள் வரும் ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் இந்த <<-1>>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். நல்ல சம்பளம் வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்ளுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!