News June 26, 2024
0.001% பேரிடம் 17 சதவீத இந்திய செல்வம்

உலகளவில் ஏழை, பணக்காரன் இடைவெளி அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் உள்ள 90% லட்சாதிபதிகள் உயர் சாதியை சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவின் மொத்த செல்வத்தை 1% பணக்காரர்கள் வைத்திருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, 0.001% மக்கள் 17% செல்வத்தை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. லட்சாதிபதிகள் பட்டியலில் பழங்குடியினர் ஒருவர் கூட இல்லை என்பது வேதனை.
Similar News
News September 17, 2025
அமித்ஷாவிடம் EPS ஒரு மணி நேரம் பேசியது என்ன?

சசிகலா, OPS, TTV, செங்கோட்டையன் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்துதான் அமித்ஷாவிடம் தனியாக EPS ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசியிருக்கிறார். இதில், இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை திட்டவட்டமாக EPS சொல்லிவிட்டாராம். அதை அமைதியாக கேட்டுக்கொண்ட அமித்ஷா, கூட்டணி கட்சிகளின் பலம் – பலவீனம், கட்சிக்குள் அதிருப்தியில் இருக்கும் மற்றவர்களை சமாதனம் செய்வது உள்ளிட்ட பல ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறாராம்.
News September 17, 2025
மூலிகை: மருத்துவ குணங்கள் அடங்கிய செங்காந்தள்!

சித்த மருத்துவத்தில் செங்காந்தள் செடி பல்வேறு பிரச்னைக்கு பயன்படுகிறது.
*செங்காந்தள் செடியின் வேருடன் குப்பைமேனி வேர், நீலி வேர் சேர்த்து அரைத்து, அரை நெல்லிக்காய் அளவு 3 நாள்கள் சாப்பிட்டால், பாம்பு- தேள் கடி விஷம் இறங்கும்.
*பிரசவத்தின்போது நஞ்சுக்கொடி இறங்காமல் அவதிப்படும் பெண்களுக்கு பச்சை செங்காந்தள் வேர்க்கிழங்கை அரைத்து அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற இடங்களில் தடவுவார்கள். SHARE.
News September 17, 2025
பெரியார் வழியில் 2026-ல் அதிமுக ஆட்சி: இபிஎஸ்

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதி பாதையில் பயணித்து, 2026-ல் அதிமுக தலைமையில் உண்மையான சமத்துவ ஆட்சியை அமைக்க உறுதியேற்போம் என EPS அழைப்பு விடுத்துள்ளார். பெரியாரின் 147-வது பிறந்தநாளையொட்டி, தனது X பக்கத்தில், கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தவர் எனவும், உணர்வுகளை தட்டி எழுப்பி உரிமைக்காக போராடியவர் #PeriyarForever என்றும் குறிப்பிட்டுள்ளார்.