News June 26, 2024
0.001% பேரிடம் 17 சதவீத இந்திய செல்வம்

உலகளவில் ஏழை, பணக்காரன் இடைவெளி அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் உள்ள 90% லட்சாதிபதிகள் உயர் சாதியை சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவின் மொத்த செல்வத்தை 1% பணக்காரர்கள் வைத்திருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, 0.001% மக்கள் 17% செல்வத்தை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. லட்சாதிபதிகள் பட்டியலில் பழங்குடியினர் ஒருவர் கூட இல்லை என்பது வேதனை.
Similar News
News October 23, 2025
இன்னும் 5 வருடத்தில் இவை அனைத்தும் அழிந்துவிடும்!

சில விஷயங்கள் நம் வாழ்வை எளிதாக மாற்றி, இந்நாள் வரை பயனளித்து வருகின்றன. ஆனால், டெக்னாலஜி வளர்ச்சியடைய இவை, கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் இவை முற்றிலுமாக அழிந்து விடும் என்றே கூறப்படுகிறது. அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். வேறு என்ன டெக்னாலஜிலாம் காலப்போக்கில் மறைந்து விடும் என நினைக்கிறீங்க?
News October 23, 2025
உடனே அனைத்து பள்ளிகளிலும்

கனமழை காரணமாக ராமநாதபுரத்தில் தொடக்க பள்ளியின் கட்டடம் விரிசல்களுடன் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சியினர் ஒரு வீடியோ வெளியிட்டனர். இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது. விரிசல்களுடன் இருக்கும் பள்ளி கட்டடங்களை போர்க்கால அடிப்படையில் சரி செய்யவும், நோய் தொற்று பரவாமல் இருக்க, பள்ளிகளில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றவும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
News October 23, 2025
வங்கிக் கணக்கு இருக்கிறதா… முக்கிய அறிவிப்பு

வங்கி வாடிக்கையாளர்களுக்கு நாமினிகளை (வாரிசுதாரர்கள்) நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் வரும் நவ.1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, *ஒருவர் தனக்கு நான்கு நாமினிகள் வரை நியமிக்கலாம். *அந்த 4 பேரில் யார் முதன்மை நாமினி, யாருக்கு எவ்வளவு சதவீதம் பங்கு என்பதையும் நிர்ணயிக்கலாம் *டெபாசிட்ஸ், லாக்கர், லாக்கரில் வைக்கும் பொருள்கள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.