News June 26, 2024
0.001% பேரிடம் 17 சதவீத இந்திய செல்வம்

உலகளவில் ஏழை, பணக்காரன் இடைவெளி அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் உள்ள 90% லட்சாதிபதிகள் உயர் சாதியை சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவின் மொத்த செல்வத்தை 1% பணக்காரர்கள் வைத்திருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, 0.001% மக்கள் 17% செல்வத்தை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. லட்சாதிபதிகள் பட்டியலில் பழங்குடியினர் ஒருவர் கூட இல்லை என்பது வேதனை.
Similar News
News December 26, 2025
கிருஷ்ணகிரி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

ஓசூர் – கிருஷ்ணகிரி இடையே திட்டமிடப்பட்டுள்ள புதிய ரயில்வே பாதை அமைக்கப்படும் கிராமங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஒன்னலவாடி, மொரனபள்ளி,தொரபள்ளி, காமன்தொட்டி, நல்லகொண்டபள்ளி, சாமனப்பள்ளி, சூளகிரி, சென்னபள்ளி, ஹொசஹல்லி, பிக்கனபள்ளி, பெல்லம்பள்ளி, குலியம், ஜிஞ்சுப்பள்ளி, பயனப்பள்ளி போன்ற 32 கிராமங்கள் வழியாக திருப்பத்தூர் வரை ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 26, 2025
சகல சௌபாக்கியம் தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு!

வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் உள்ள மகாலட்சுமிக்கு, அபிஷேகத்திற்குத் தேவையான பசும்பாலை வழங்கினால் பண வரவு உண்டாகும். ➤பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட, செல்வம் பெருகும் ➤சுக்ர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழால் அர்ச்சனை செய்ய தனலாபம் கிடைக்கும் ➤மாலையில், சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் ஏதேனும் துர்சக்திகள் இருந்தால் விலகிவிடும். SHARE IT.
News December 26, 2025
அன்புமணியுடன் பேசினால் சட்ட நடவடிக்கை

டெல்லி HC தீர்ப்பின் மூலம் அன்புமணிக்கு பாமகவின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தும் உரிமையில்லை என்பது உறுதியாகியுள்ளதாக பாமக சமூக நீதிப் பேரவை தெரிவித்துள்ளது. எனவே, பாமக பெயரில் அன்புமணி தொடர்புடையவர்களுடன் அரசியல், தேர்தல் (அ) நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொண்டால் சட்டப்படி குற்றமாகும் எனவும் கூறியுள்ளது. இதை மீறி செயல்படுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளது.


