News April 25, 2025

பங்குச்சந்தையில் ₹8 லட்சம் கோடி நஷ்டம்

image

பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கலாம் என்ற பதற்றம் நிலவுவதால், பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை கண்டுள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 207 புள்ளிகள் சரிந்து 24,039 புள்ளிகளில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 588 புள்ளிகளை இழந்தது. இன்று ஒரே நாளில் மட்டும், முதலீட்டாளர்கள் சுமார் ₹8 லட்சம் கோடி வரை இழந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News August 23, 2025

ரஜினி வரலாற்றில் முதல்முறை… குவியும் ‘கூலி’ வசூல்

image

ரஜினி நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் ‘கூலி’ படத்தின் வசூல் ₹500 கோடியை நெருங்கிவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேகமாக இந்த சாதனையை படைத்த ரஜினி படம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், எந்திரன் பட இந்தி பதிப்பு வசூலை (₹23.84 கோடி) இந்த படம் எட்டே நாள்களில்(₹26.02 கோடி) முறியடித்துள்ளதாம். ரஜினி கரியரில் அதிகம் வசூலித்த ‘2.0’, ‘ஜெய்லர்’ ஆகிய படங்களின் வசூலை ‘கூலி’ முந்துமா?

News August 23, 2025

SPACE: பூமி சுழல்வதை நிறுத்தினால் என்ன ஆகும்?

image

பூமி சுழல்வதை நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? ▶ஈர்ப்பு விசையின்றி மனிதர்கள் தூக்கி வீசப்படுவார்கள் ▶பூமியின் ஒரு முனையில் எப்போதும் வெயில், மற்றொரு முனையில் குளிர் நிலவும். இதனால் உயிரினங்கள் இறக்கும் ▶சூரியன் இன்றி தாவரங்கள் வளராது. உணவு தட்டுப்பாடு ஏற்படும் ▶சுனாமி, பூகம்பங்கள் உருவாகும் ▶மொத்தத்தில் உயிரினங்கள் வாழ தகுதியற்ற கோளாக பூமி மாறும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

News August 23, 2025

தவெக தொண்டர்கள் 3 பேர் மரணம்.. விஜய் இரங்கல்

image

மதுரை மாநாட்டிற்கு சென்றபோது உயிரிழந்த அக்கட்சியின் தொண்டர்கள் 3 பேரின் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில், ஊரப்பாக்கத்தை சேர்ந்த பிரபாகரன், நீலகிரியை சேர்ந்த ரித்திக் ரோஷன், விருதுநகரை சேர்ந்த காளிராஜ் ஆகியோரின் மறைவு மன வேதனை அளிப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும், அவர்கள் விரும்பிய இலட்சிய சமுதாயத்தை நாம் படைத்து காட்டுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!