News November 30, 2024
மனைவிக்கு நகை வாங்கியதால் ₹8 கோடி பரிசு!!

அதிர்ஷ்டம் ஒருவருக்கு எந்த ரூபத்தில் அடிக்கும் என்பது தெரியாத ஒன்றே. மனைவிக்காக நகை வாங்கிய ஒருவருக்கு இந்திய மதிப்பில் ₹8 கோடி ரூபாய் பரிசாக லக்கி டிராவில் கிடைத்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள நகைக்கடை ஒன்று வாடிக்கையாளர்களை ஈர்க்க இவ்வாறு செய்யப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிதம்பரம் 3 மாதங்களுக்கு முன்பு, இக்கடையில் மனைவிக்கு தங்க செயின் வாங்க இம்முறை அவருக்கு பரிசு கிடைத்துள்ளது.
Similar News
News April 28, 2025
இந்தியா vs பாக்.. உன்னிப்பாக கவனிக்கிறோம்: சீனா

இந்தியா – பாக். இடையேயான பதற்றமான சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். நிலைமை குறித்து பாக். வெளியுறவு அமைச்சர் முகமது இஷக்குடன் ஆலோசித்த பின்னர் அவர் கூறும்போது, தீவிரவாத தாக்குதல் தொடர்பான பாக். அரசின் விசாரணையை ஆதரிப்பதாகவும், இருதரப்பும் கட்டுப்பாட்டுடன் நடப்பதுடன், பதற்றத்தை தணிக்க இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
News April 28, 2025
விரைவில் உருவாகும் நாட்டின் முதல் AI..!

இந்தியாவின் முதல் உள்நாட்டு AI அடித்தள மாதிரியை உருவாக்க சர்வம் AI நிறுவனத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. 67 நிறுவனங்களிடம் இருந்து திட்ட அறிக்கை பெறப்பட்ட நிலையில், மேற்கூறிய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வம் AI, கடந்த 2023-ல் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர்களில் ஒருவரான விவேக் ராகவன், ஆதார் அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர்.
News April 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 320 ▶குறள்: நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். ▶பொருள்: தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.