News July 1, 2024
புழக்கத்தில் ₹7,581 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள்

ரிசர்வ் வங்கி 97.87% ₹2,000 நோட்டுகளை திரும்ப பெற்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே 19ஆம் தேதி ₹2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது, மொத்தமாக ₹3.56 லட்சம் கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், தற்போது ₹7,581 கோடி மதிப்பிலான நோட்டுகள் மட்டும் மக்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது.
Similar News
News September 20, 2025
அதிமுக கூட்டணியில் இணையும் கட்சிகள்: GK வாசன்

தேர்தலை எதிர்கொள்வதில் அதிமுக அணி வெற்றி அணியாக உருவெடுத்து இருப்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். எத்தனை அணிகள் வேண்டுமானாலும் களத்தில் நிற்கலாம். ஆனால் மக்களின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலிப்பது அதிமுக கூட்டணி மட்டுமே என அவர் கூறியுள்ளார். வரும் காலங்களில் அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரக்கூடிய பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக ஜி.கே.வாசன் பேசினார்.
News September 20, 2025
லீவுக்கு முந்தைய நாள் இரவுக்கு இப்படி ஒரு பவரா?

‘ஹைய்யா.. நாளைக்கு லீவு’ என்பது, பள்ளிக் காலம் தொட்டே நம்முடன் கலந்துள்ள உணர்வு. என்னதான் விடுமுறை நாள் நமக்கு இன்பத்தை கொடுத்தாலும், அதற்கு முந்தைய நாளின் மாலைப்பொழுது கொடுக்கும் நிம்மதியை எந்த நாளும் கொடுத்திட முடியாது. ‘நாளை ஒருநாள் லீவ் இருக்கிறது’ என்ற நினைப்புடனே, முந்தைய நாளை ரசித்து அனுபவித்து வருபவர்கள் பலர். நீங்கள் லீவுக்கு முந்தைய நாளை எப்படி கழிப்பீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க
News September 20, 2025
TRB ராஜாவை மறைமுகமாக சாடிய விஜய்

திருவாரூர் பரப்புரையில் அமைச்சர் TRB ராஜாவை விஜய் மறைமுகமாக சாடினார். இந்த மாவட்டத்தில் ஒரு மந்திரி இருக்கிறார். அவரோட வேலை என்ன தெரியுமா? CM குடும்பத்திற்கு சேவை செய்யுறது மட்டும் தான் அவருடைய வேலை. அந்த அமைச்சருக்கு மக்கள் தான் முக்கியம்னு புரிய வைக்க வேண்டும் என விஜய் கூறினார். மேலும், திருவாரூரில் பஸ் ஸ்டாண்டை NH உடன் இணைக்க சரியான ரோடு வசதி கிடையாது என்று குற்றஞ்சாட்டினார்.