News March 24, 2025
விவசாயிகளுக்கு ₹6,000: மார்ச் 31க்குள் விண்ணப்பிக்கவும்

விவசாயிகள் அடையாள எண் பெற மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. விவசாயிகள் தனி அடையாள எண் பெறாவிட்டால், மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் ₹6,000 பெற முடியாது என கூறியுள்ளது. ஏற்கெனவே, PM கிசான் திட்டத்தில் இப்போது இணைந்தாலும், உதவித் தொகை வழங்கப்படும் என்றும், தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்குமாறும் மத்திய அரசும் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 25, 2025
மனிதத்தன்மையற்ற செயல்: டாஸ்மாக்

டாஸ்மாக்கில் ED ரெய்டு நடந்ததற்கு எதிராக தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் அதிகாரிகள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ED சோதனையின் போது நாங்கள் நடத்தப்பட்ட விதம் மனிதத்தன்மையற்ற செயல் என அவர்கள் கூறியுள்ளனர். மேலும், ED அதிகாரிகள் தங்களை ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்ததாகவும், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
News March 25, 2025
மனோஜ் பாரதிராஜா காலமானார்

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார். தாஜ் மகால், வருஷமெல்லாம் வசந்தம் ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவர், மார்கழி திங்கள் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார்.
News March 25, 2025
குஜராத் அணியில் 4 தமிழக வீரர்கள்…!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அந்த அணியின் பிளேயிங் XI-ல், 3 தமிழக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். சாய் கிஷோர், சாய் சுதர்சன், ஷாருக் கான் ஆகிய 3 வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்படுபவர்களின் லிஸ்ட்டில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?