News October 1, 2025
₹6 செலுத்தினால் ₹1 லட்சம் கிடைக்கும் திட்டம்

போஸ்ட் ஆபீஸ் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ திட்டத்தில், 1 நாளைக்கு ₹6 பிரீமியமாக செலுத்தினால் 5 வருடங்கள் கழித்து ₹1 லட்சம் வரை கிடைக்கும். இது குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பதால் அவர்கள் பெயரில்தான் கணக்கு தொடங்கமுடியும். இதற்கு, குழந்தைகள் 5-20 வயதிற்குள்ளேயும், பெற்றோர்கள் 45 வயதிற்கு மிகாமலும் இருக்கணும். இந்த திட்டத்தை தொடங்க அருகில் உள்ள போஸ்ட் ஆபீசுக்கு போங்க. SHARE.
Similar News
News October 1, 2025
இந்திய கோடீஸ்வரர்கள் சொத்து மதிப்பு இவ்வளவா!

2025 M3M Hurun இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, ரோஷினி நாடார் குடும்பங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. Perplexity நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் (31), இந்தியாவின் இளம் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார். மேலும், இந்த பட்டியலில் ஷாருக்கான் முதல் முறையாக இணைந்துள்ளார். இவர்களின் சொத்து மதிப்பை அறிய மேலே போட்டோக்களை Swipe செய்யவும்.
News October 1, 2025
டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வரும் புடின்

இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க, வரும் டிச. 5 மற்றும் 6-ம் தேதிகளில் புடின் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். மேலும், ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா வரிவிதித்துள்ள நிலையில், ரஷ்ய அதிபரின் வருகை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
News October 1, 2025
CM ஸ்டாலினுக்கு நயினார் எழுப்பும் 12 கேள்விகள்

கரூர் துயரம் தொடர்பாக CM ஸ்டாலினுக்கு 12 கேள்விகளை நயினார் நாகேந்திரன் முன்வைத்துள்ளார். கரூர் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தயங்குவது ஏன்? பெரிய அரசியல் பேரணி நடக்கும் வேளையில் SP கரூரில் இல்லாத காரணம் என்ன? விஜய் பரப்புரையின் கூட்டத்தை சரியாக மதிப்பிடாதது எதனால்? உள்பட 12 கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார். மேலும், திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே கரூர் துயரத்திற்கான காரணம் என்று அவர் சாடியுள்ளார்.