News January 20, 2025

₹5,600,830,000,000,000… இந்தியா இழந்த செல்வம்

image

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர், தங்கள் நாட்டுக்கு கொள்ளையடித்து சென்ற செல்வத்தின் மதிப்பு ₹5,601 லட்சம் கோடி என்று ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ‘Takers, Not Makers’ என்ற அந்த அறிக்கையில், பிரிட்டனில் பணக்கார வர்க்கம் உருவாக இதுதான் காரணம் என்றும், உலகப் பொருளாதாரத்தில் 1750-ல் 25% இருந்த இந்தியாவின் பங்களிப்பு, ஆங்கிலேயரின் சுரண்டலால், 1900-ல் 2% ஆகக் குறைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News August 26, 2025

CM ஸ்டாலின் இல்லை.. சேகர்பாபு, PTR பங்கேற்பு

image

ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சி இருப்பதால் கேரளாவின் ‘லோக அய்யப்ப சங்கமம்’ விழாவில் பங்கேற்கவில்லை என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள CM பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்த நிலையில், CM ஸ்டாலினுக்கு பதிலாக செப்.20 அன்று அமைச்சர்கள் சேகர்பாபு, PTR அந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, TN-ல் கோயிலுக்கு செல்லாத ஸ்டாலின், கேரள அரசின் ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தமிழிசை கூறியிருந்தார்.

News August 26, 2025

வரலாற்றில் இன்று

image

*1910 – நோபல் பரிசு வென்ற அன்னை தெரசா பிறந்த தினம்
*1954 – நடிகரும் தயாரிப்பாளருமான ராஜ்கிரண் பிறந்த தினம்
*1966 – தென்னாப்பிரிக்காவில் எல்லைப் போர் ஆரம்பமானது
*1972 – 22-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனியில் தொடங்கியது
*1978 – விண்ணுக்கு பயணித்தார் முதல் ஜெர்மனி விண்வெளி வீரர் சிக்மண்ட் ஜான்.

News August 26, 2025

புதிய வருமான வரி விதிகள்… டிசம்பரில் முக்கிய அறிவிப்பு

image

வரும் டிசம்பருக்குள் புதிய வருமான வரி விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த ஆக.,12-ம் தேதி புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உரிய தேதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டாலும் டிடிஎஸ் தொகையை கோர இந்த மசோதா வழிவகுத்துள்ளது. வருமான வரி தாக்கலை எளிமைப்படுத்தும் பல அம்சங்களும் இதில் உள்ளதாம்.

error: Content is protected !!