News August 30, 2024

2029க்குள் र50K கோடிக்கு பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி

image

2029க்குள் र50,000 கோடிக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்திருப்பதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 2023-24இல் இந்தியா र21K கோடிக்கு ஏற்றுமதி செய்திருப்பதாகவும், உற்பத்தி र1.27 லட்சம் கோடியை தாண்டிவிட்டது என்று அவர் கூறியுள்ளார். உற்பத்தியை இந்த நிதியாண்டில் र1.75 லட்சம் கோடி, 2029க்குள் र3 லட்சம் காேடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

Similar News

News August 21, 2025

பேரறிஞர் அண்ணா பொன்மொழிகள்

image

*உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன். வாழ்த்துகுரியவன். அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுத்துவது சமுதாயத்தின் நல்வாழ்வையே புரையேறச் செய்வதாகும்.
*போட்டியும், பொறாமையும், பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே.
*சமத்துவம், சமதர்மம் போன்ற லட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம்

News August 21, 2025

விஜயை குறிவைக்கிறாரா சீமான்?

image

கடந்த காலங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்த வந்தார் சீமான். ஆனால் மு.க.முத்து மறைவுக்கு ஸ்டாலினிடம் நேரில் ஆறுதல் தெரிவித்த பின், திமுகவை அவர் விமர்சித்தாலும், தவெகவுடன் ஒப்படுகையில் குறைவு என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உதாரணத்துக்கு ‘அணிலே, அணிலே ஓரம் போ அணிலே’ என்ற விமர்சனம் இணையத்தில் வைரல். இதற்கு TVK தொண்டர்கள் சோசியல் மீடியாவில் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 21, 2025

CPR-க்கு தமிழக கட்சிகள் ஆதரவு தாருங்கள்: அண்ணாமலை

image

தமிழக அரசியல் கட்சிகள் CPR-க்கு ஆதரவு தர வேண்டுமென அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், CM, PM குற்றம் புரிந்தால் பதவிநீக்கம் செய்வதற்கான மசோதா குறித்து பேசிய அவர், மத்திய அரசால் தற்போது கொண்டு வரப்படும் புதிய சட்டம் வரவேற்கத்தக்கது என்றார். இச்சட்டத்தால் தவறு செய்தவர்கள் சிறைக்கு செல்வர் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் ஏற்படும் என்றார்.

error: Content is protected !!