News August 21, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு தகவல்

பொங்கல் பரிசுத் தொகையாக ரேஷன் கார்டுக்கு தலா 5,000 வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு தீபாவளி பண்டிகை நாளில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, ₹10,000 கோடி தேவை என்பதால், அதற்கான நிதி ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு நிதித்துறைக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாம். தீபாவளிக்கு ஜிஎஸ்டி குறைப்பை அறிவிக்க இருப்பதாக பிரதமர் மோடி ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 15, 2026
அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் CM மரியாதை!

பொங்கல் திருநாளை முன்னிட்டு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று CM ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக கடற்கரை சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் வசிக்கும் வீடற்றவர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். மேலும், நாராயணப்பதெருவில் சாலையோரம் வசிக்கும் மக்களை சந்தித்தவர், அங்கு வசித்துவரும் துரை-சுமதி என்ற தம்பதியரின் ஆண் குழந்தைக்கு ‘வெற்றி’ என்று பெயர் சூட்டியுள்ளார்.
News January 15, 2026
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: ராஜ்நாத் சிங்

தீவிரவாத மனப்பான்மை நீடிக்கும் வரை அமைதிக்கான நமது ஆபரேஷன் தொடரும், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த தேசிய ராணுவ தின நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியா தனது தேசிய குணத்தை வெளிப்படுத்தியது என்றும், வரலாற்றில் தைரியத்தின் அடையாளமாக ஆபரேஷன் சிந்தூர் நினைவுகூரப்படும் என்றும் அவர் பேசியுள்ளார்.
News January 15, 2026
பொங்கல் முடிந்து ஊருக்கு திரும்புவோருக்கு அதிர்ச்சி!

குறைவான முன்பதிவு காரணமாக 5 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. அதன்படி, வரும் 19-ம் தேதி மாலை 3.30 மணிக்கு தாம்பரம்- கன்னியாகுமரி, 19-ம் தேதி இரவு 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரல்- கோவை, 21-ம் தேதி பகல் 12.30 மணிக்கு தாம்பரம் – நாகர்கோவில், 21-ம் தேதி நள்ளிரவு 12.35 மணிக்கு கோவை போத்தனூர் – சென்ட்ரல், 21-ம் தேதி பகல் 1.50 மணிக்கு சென்ட்ரல் – போத்தனூர் ஆகிய ரயில்கள் ரத்தாகியுள்ளன.


