News September 30, 2025

அனைத்து ரேஷன் கார்டுக்கு ₹5,000… வெளியான புது தகவல்

image

வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹5,000 ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின்போது முதலமைச்சர் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.

Similar News

News October 1, 2025

எண்ணூர் விபத்து: ₹10 லட்சம் நிதியுதவி CM அறிவித்தார்

image

எண்ணூர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு CM ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். கட்டுமானப் பணியின் போது 9 பேர் உயிரிழந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிதியுதவி வழங்கி CM உத்தரவிட்டுள்ளார். இதே போல PM மோடி உயிரிழந்தவர்களுக்கு ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News October 1, 2025

ஆதவ் அர்ஜுனா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

image

ஆதவ் அர்ஜுனா மீது பின்வரும் 5 பிரிவுகளில் சென்னை சைபர் க்ரைம் போலீஸ் வழக்குப் பதிந்துள்ளது. *192- கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பாடு. *196(1)பகையை வளர்க்கும் செயல். *197(1)(d) இந்திய இறையாண்மை, ஒற்றுமைக்கு தீங்கு விளைவித்தல். *353(1)(b) பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வதந்திகளை வெளியிடுவது. *353(2) பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் தகவல் வெளியிடுதல். அடுத்து என்ன ஆகும்?

News October 1, 2025

சிக்கன் குழம்பு கேட்ட 7 வயது மகனை கொன்ற தாய்

image

மகாராஷ்டிராவில் 7 வயது சிறுவன் தனது தாயிடம் சிக்கன் குழம்பு செய்துகொடுக்கும்படி கேட்டுள்ளார். இதனால் எரிச்சலான தாய், பூரி கட்டையால் தனது மகனை அடித்து கொன்றுவிட்டு, மஞ்சள் காமாலையால் இறந்துவிட்டதாக நாடகமாடியிருக்கிறார். ஆனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகித்து போலீசாரிடம் தெரிவிக்க, உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அப்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!