News August 27, 2025
அனைத்து ரேஷன் கார்டுக்கு ₹5,000… வெளியான புது தகவல்

வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹5,000 ரொக்கப் பரிசு வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின்போது முதலமைச்சர் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.
Similar News
News March 8, 2026
சர்ச்சையில் அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம்!

இன்று WC T20I இறுதிப் போட்டி நடைபெறவுள்ள அகமதாபாத் ஸ்டேடியத்தில்தான், 2023-ம் ஆண்டின் WC ODI இறுதிப் போட்டியும் நடைபெற்றது. ஆனால், அப்போது இந்திய அணி தோற்றதை போல, இம்முறை நடந்து விடக்கூடாது என்பதற்காக மைதானத்தின் ஆடுகளம் மாற்றப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் இந்திய அணிக்கு உதவும் வகையில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏதுவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாம்.
News March 8, 2026
எந்திரன் படத்தில் வந்தது நிஜமாகவே நடக்கப்போகுது!

எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவை உருவாக்கிய வசி, அது போர் சமயங்களிலும் பயன்படும் என கூறியிருப்பார். அதுபோல, எதிர்காலப் போர்களில் AI பங்கு அதிகமாக இருக்கும் எனவும், போர்க்களத்தில் சரியான முடிவுகளை எடுக்கவும், வெற்றிபெறவும் AI உதவும் என்றும் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுஹான் கூறியுள்ளார். அத்துடன் ரோபோக்கள் போர்தொழில் பழகும் நிலையும் உருவாகலாம் என நிபுணர்கள் சொல்கின்றனர்.
News March 8, 2026
தமிழக தேர்தல்: ECI வெளியிட்ட புதிய அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி வரும் 15 (அ) 16-ம் தேதிகளில் வெளியாகும் என கூறப்படும் நிலையில், ECI புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ₹40 லட்சத்துக்கும் மேல் செலவழித்தால், ஊழலாக கருதப்படும் என்று ECI எச்சரித்துள்ளது. மேலும், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் கண்காணிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.


