News October 19, 2025
₹5,000.. அறிவித்தது தமிழக அரசு

வடகிழக்கு பருவமழை 2 நாளுக்கு முன் தொடங்கியுள்ளது. மழைக்காலங்களில் உப்பு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்படும் நேரத்தில் உப்பளத் தொழிலாளர்கள் மாற்றுப் பணி ஏதுமின்றி வருவாய் இல்லாமல் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள். இதனால், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், உப்பளத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ₹5,000 வழங்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க First இத பண்ணுங்க!

இந்தியர்களின் அடிப்படை ஆவணங்களுள் மிக முக்கியமான ஒன்று ஆதார். ஆதார் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. எனவே, நமது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க, இப்போதே ஆதாரை புதுப்பிப்பது முக்கியம். இதற்காக, 2026 செப்.30 வரை, 5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு செய்யப்படும் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு, இலவசமாக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கொள்ளுமாறு அரசு தெரிவித்துள்ளது.
News October 19, 2025
கல்யாணம் வேண்டாம்.. Kens ஆண்கள் மட்டும் போதும்!

சீனாவில் தற்போது, இதுதான் டிரெண்டிங்காக உள்ளது. வாழ்வில் Commitments வேண்டாம், ஆனால் பார்ட்னர் மட்டும் வேண்டும் என்று முடிவெடுக்கும் பெண்கள், Kens என்ற ஆண்களை தங்களுடன் வைத்து கொள்கிறார்கள். இந்த Kens ஆண்கள் முற்றிலும் Professional. ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேச மாட்டார்கள். வீட்டு வேலையில் தொடங்கி அனைத்திற்கும் உதவியாக இருப்பார்கள் என்பதால், பெண்கள் மத்தியில் டிமாண்ட் அதிகரித்துள்ளது.
News October 19, 2025
தீபாவளி விடுமுறை.. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

தீபாவளியை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட அக்.21-ம் தேதி ஒருநாள் கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளி முடிந்து, பல்வேறு நகரங்களில் இருந்து பொதுமக்கள் திரும்ப ஏதுவாக அக். 21 – 23 வரை 15,129 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிய மற்றும் புகார் தெரிவிக்க 94450 14436 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.