News April 1, 2024
₹500, ₹1000.. பணத்தில் ஜொலிக்கும் தமிழகம்

தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பரப்புரை கூட்டத்திற்கு அழைத்து வரப்படும் ஆண்களுக்கு குவார்ட்டர், பிரியாணி, ₹500 ரொக்கம், பெண்களுக்கு ₹500 ரொக்கம் தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதுவும், விடுமுறை தினமான நேற்று இளைஞர்களை அதிகளவில் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு அரசியல் கட்சிகள் பயன்படுத்தியுள்ளன. அவர்களுக்கு ₹1000 வரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News August 13, 2025
உடலுறுப்புகளை தானம் செய்ய இன்றே முடிவெடுங்கள்!

‘இறந்தும் வாழ்கிறார்’ என்ற சொல்லே நாம் வாழ்ந்ததற்கான அடையாளம். இதற்கு நமது நன்மை மிகுந்த செயல்பாடுகள் ஒரு அடையாளமாக இருந்தாலும், இறப்பின் விளிம்பில் உள்ளவர்களுக்கு கொடுக்கும் உடலுறுப்பு தானம் நமக்கு மேலும் புகழ் சேர்க்கும். உடலுறுப்பு தானம் செய்பவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு என்ற முன்னெடுப்பும் தமிழகத்தில் உள்ளது. உடலுறுப்பு தான தினமான இன்று, உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வாருங்கள்!
News August 13, 2025
சிக்கித் தவிக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்?

நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜின் திருமண சர்ச்சை இன்னும் ஓயவில்லை. திருமண செய்தி வெளியான அடுத்த நாளே, தான் கர்ப்பம் என 2-வது மனைவி ஜாய் கிரிசில்டா கூறினார். ஆனால், <<17386595>>முதல் மனைவி ஷ்ருதியுடன்<<>> நேற்று நிகழ்ச்சியில் ரங்கராஜ் பங்கேற்றது பல கேள்விகளை எழுப்பியது. இதனிடையே, மெடிக்கல் செக் அப் படங்களை பதிவிட்ட கிரிசில்டா, குழந்தைக்கு ராஹா ரங்கராஜ் என பெயர் வைத்துள்ளாராம். ஒரே குழப்பம்!
News August 13, 2025
மோடி ஜி.. ரோடு சரியில்ல… லெட்டர் எழுதிய சுட்டி!

பெங்களூருவின் டிராபிக்கால் மக்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து 5 வயது சிறுமி ஒருவர், PM மோடிக்கு லெட்டர் எழுதி இருக்கிறார். அதில், ‘மோடி ஜி, ஓவர் டிராபிக்கால் ஸ்கூலுக்கும் ஆபிஸுக்கும் லேட்டாக போகிறோம், ரோடு மோசமாக இருக்கு. ஹெல்ப் பண்ணுங்க’ என எழுதியுள்ளார். இந்த லெட்டர் வைரலாக, PM மோடி இதற்கு என்ன செய்ய போகிறார்? என நெட்டிசன்கள் வினவி வருகின்றனர்.