News June 26, 2024
EX அமைச்சர் ஜெயக்குமார் வழக்கில் ₹5 லட்சம் அபராதம்

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில், அவரது உறவினர் மகேஷ் என்பவருக்கு ₹5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தன்னை மிரட்டி தனது நிலத்தை அபகரித்ததாக ஜெயக்குமார் மீது மகேஷ் புகாரளித்திருந்தார். இதில், தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ஜெயக்குமார் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 583 நாள்களாக மகேஷ் பதிலளிக்காததால் தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
மருத்துவமனையில் நடிகர் ரோபோ சங்கர்.. HEALTH UPDATE

நடிகர் ரோபோ சங்கர் சுயநினைவுடன் இருப்பதாக அவரது மகள் இந்திரஜா கூறியுள்ளார். நேற்று ஷூட்டிங்கின்போது திடீரென மயங்கி விழுந்த ரோபோ சங்கர், தனியார் ஹாஸ்பிடல் ஒன்றில் ICU-வில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் பரவியது. இதனிடையே, மயக்கத்திற்கு LOW BP தான் காரணம் எனவும் தனது தந்தை விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
ஆரோக்கியமான உடலுக்கு

வாழ்க்கையில் பெரிய பலன்கள், பெரும்பாலும் குட்டி குட்டி தினசரி பழக்கங்கள் மூலம் ஏற்படுகின்றன. அவற்றை நாம் தினமும் கடைப்பிடிப்பதன் மூலம் நமது ஆற்றல் மேம்படும், நல்ல தூக்கத்தையும் பெறலாம். அந்த குட்டி குட்டி பழக்கங்கள் என்ன என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக பாருங்க. இதில், எதை முதலில் தொடங்க இருக்கீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 18, 2025
ராகுலின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தேர்தல் ஆணையம்

ராகுல் காந்தி கூறிய <<17748198>>குற்றச்சாட்டுகள்<<>> தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களை நீக்க நடந்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும், அது குறித்து புகார் அளித்து விசாரணை நடைபெறுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது. எந்தவொரு வாக்கையும் ஆன்லைன் மூலமாக நீக்க முடியாது என ECI திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.