News April 24, 2024

தொழிலதிபரிடம் இணைய வழியில் ₹5.2 கோடி மோசடி

image

அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட பெங்களூருவை சேர்ந்த 52 வயது தொழிலதிபர் ஒருவர் இணைய மோசடியில் ₹5.2 கோடியை இழந்துள்ளார். வாட்ஸ்ஆப் மூலம் அவரைத் தொடர்புகொண்ட ஒரு கும்பல், பங்குச் சந்தையில் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசையைத் தூண்டியுள்ளனர். பின்னர் bys-app.com என்ற லிங்க்கை அனுப்பி, ₹5.2 கோடி முதலீடு செய்ய வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் காவல்துறையின் உதவியை நாடியுள்ளார்.

Similar News

News January 7, 2026

நயினாருக்கு செந்தில் பாலாஜி பதிலடி

image

கரூர் துயரில் <<18762471>>நயினாரின்<<>>
குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என அவர் தெரிவித்துள்ளார். போலீஸ் கூறிய இடத்தில் விஜய்யின் வாகனத்தை நிறுத்தாதது, மாற்றுப்பாதையில் சென்றது பற்றி நயினார் பேசவில்லை என்றும், நடந்தவை குறித்து தெரியாமல் குறுகிய மனப்பான்மையுடன் சொன்ன கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

News January 7, 2026

சேலையில் மிளிரும் ‘சிங்காரி’ ❤️❤️

image

‘றெக்க மட்டும் இருந்தா என் ஆளு தேவதை மச்சான்’ என்ற வசனத்திற்கு நடிகை மமிதா பைஜூ உயிர் கொடுத்திருக்கிறாரா என தோன்றுகிறது. இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்த ரீசண்ட் போட்டோஷூட்டுக்கு ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். வண்ணச் சேலையில் மின்னும் பூவாய் க்யூட்டான ரியாக்‌ஷன் கொடுக்கும் ‘விஜய்யின் ரீல் மகள்’ மமிதாவின் போட்டோக்களை மேலே ஸ்வைப் செய்து நீங்களும் பாருங்க!

News January 7, 2026

அமைச்சர் ரகுபதியை கண்டித்த அண்ணாமலை

image

நாவடக்கம் இன்றி திரியும் திமுகவினருக்கு, TN மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் வழக்கின் தீர்ப்பை விமர்சித்து சுடுகாட்டில் தான் பிணத்தை எரிக்க வேண்டும், பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது என்று அமைச்சர் ரகுபதி பேசியது கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார். அவரது பேச்சு நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் X-ல் அண்ணாமலை சாடியுள்ளார்.

error: Content is protected !!