News November 25, 2024

சபரிமலை தேவசம் போர்டுக்கு ₹41.64 கோடி வருவாய்

image

சபரிமலையில் பக்தர்கள் வருகை மூலம் கடந்த 9 நாள்களில் ₹41.64 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ. 15ஆம் தேதி திறக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் முதல் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது வரை 6,12,290 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இது கடந்தாண்டு 3,03,501ஆக இருந்தது.

Similar News

News August 21, 2025

விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்த EPS

image

தவெக மாநாட்டு திடலில், அண்ணா, எம்ஜிஆருடன் விஜய் இருப்பது போன்ற பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிதாக கட்சி தொடங்குபவரும் நம் தலைவரை போற்றித்தான் கட்சி தொடங்கவேண்டிய நிலை இருக்கிறது என்று விஜய்யை EPS அட்டாக் செய்துள்ளார். நம் தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர்கள் எனக் கூறிய அவர், 2026-ல் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற பொதுமக்கள் நல்லாதரவை தரவேண்டும் என்றார்.

News August 21, 2025

நாளை வங்கியின் இந்த சேவைகள் வேலை செய்யாது!

image

வாடிக்கையாளர்களுக்கு HDFC வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாளை (ஆகஸ்ட் 22) இரவு 11 மணி முதல், ஆகஸ்ட் 23-ம் தேதி காலை 6 மணி வரை வங்கியின் சில சேவைகளில் பாதிப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், Email சேவை, வங்கியின் WhatsApp & SMS சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில், Net banking, Paytm, Googlepay போன்ற செயலிகளில் பணபரிவர்த்தனை செய்ய முடியும்.

News August 21, 2025

உடல் எடையை குறைக்க உதவும் ‘பாசிப்பயறு அடை’

image

◆உடல் எடை குறைப்பு, செரிமானம் & இதய ஆரோக்கியத்திற்கு இது சிறந்தது.
➥பாசிப்பயிறு & அரிசியை தனித்தனியாக 4- 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
➥ஊறிய பிறகு, அதில், வெங்காயம், சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை & உப்பு சேர்த்து மாவாக அரைத்து கொள்ளவும்.
➥இந்த மாவை புளிக்க வைக்க வேண்டிய தேவையே கிடையாது. அரைத்ததும் அப்படியே அடை செய்யலாம். SHARE IT.

error: Content is protected !!