News January 16, 2026
₹4,000.. வந்தது மகிழ்ச்சியான செய்தி

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 22-வது தவணை வரும் பிப்ரவரியில் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் 21வது தவணைத் தொகையை பெறாத விவசாயிகளின் கணக்குகளில் அத்தொகையும் சேர்த்து மொத்தம் ₹4,000 வரவு வைக்கப்படும் என தகவல் வந்துள்ளது. அதற்கு முன்னதாக விவசாயிகள் தங்கள் e-KYCஐ முடிக்க வேண்டும் எனவும், வங்கி கணக்கை ஆதாருடன் இணைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News February 2, 2026
தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பெண்கள்!

பாகிஸ்தான் ராணுவத்துக்கும் பலுசிஸ்தான் விடுதலைப் படைக்கும்(BLA) இடையே நடக்கும் <<19026027>>மோதல் <<>> அந்நாட்டில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இதில் BLA-வை சேர்ந்த பெண்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெண்கள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 50 பேர் கொல்லப்பட்டனர். மோதலில் 200 பாக்., ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக BLA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 2, 2026
ஒரு கார் ரெஜிஸ்டரேஷன் நம்பருக்கு ₹2.08 கோடி!

ஆந்திராவை சேர்ந்த கிரண் என்பவர், ‘DDC 0001’ என்ற வாகன எண்ணை ₹2.08 கோடிக்கு வாங்கியுள்ளார். Big Boy Toyz Auction House நடத்திய ஏலத்தில் வாங்கப்பட்ட இந்த எண்தான், நாட்டின் மிக விலையுயர்ந்த வாகன எண். இதற்கு முன், DL 1C 0001 என்ற எண் ₹1.5 கோடிக்கு ஏலம் போனதே ரெக்கார்டாக இருந்தது. அதிக விலைக்கு கார், பைக் வாங்கலாம்; யாராவது நம்பரை வாங்குவாங்களா என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News February 2, 2026
விஜய் ஊழல்வாதி தானே? திண்டுக்கல் சீனிவாசன்

பொது எதிரி என பாஜகவை கூறும் விஜய், அக்கட்சியை விமர்சிக்காதது ஏன் என திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சிக்கும் விஜய் ஊழல்வாதி தானே, அவர் சம்பாதித்தது கருப்பு பணமா, வெள்ளை பணமா என சாடினார். மேலும், ஆதவ் அர்ஜுனா நேர்மையான வழியில் சம்பாதித்தாரா என்றும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து சிறை சென்றவர் தானே செங்கோட்டையன் எனவும் விமர்சித்துள்ளார்.


