News April 28, 2024

₹4 கோடி பறிமுதல் வழக்கு சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

image

தாம்பரத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்களை சிபிசிஐடி-யிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர் . பிடிப்பட்ட ₹4 கோடி நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் எடுத்து செல்லப்பட்டதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர். ஆனால், இதற்கு நயினார் மறுப்பு தெரிவித்த நிலையில், வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

Similar News

News November 14, 2025

பிஹார் வெற்றியை கொண்டாட வேண்டாம்: பாஜக

image

பிஹாரில் NDA கூட்டணி முன்னிலையில் உள்ளதால் பாஜகவினர் கொண்டாட தயாராகி வருகின்றனா். இந்நிலையில், டெல்லி வெடிகுண்டு சம்பவத்தில் பலர் உயிரிழந்திருப்பதை கருத்தில் கொண்டு வெற்றியை கொண்டாட வேண்டாம் என பாஜக அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, தேர்தல் நடத்தை விதிகள் முடிவடையும் வரை தலைநகர் பாட்னாவில் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என EC அறிவுறுத்தியிருந்தது.

News November 14, 2025

நகை கடன்… முக்கிய அறிவிப்பு

image

வெள்ளி நகைகள், நாணயங்களுக்கு வங்கிகளில் கடன் வழங்கும் நடைமுறை 2026 ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது. கடனை திருப்பி செலுத்தவில்லை எனில் நகைகளை வங்கிகள் ஏலம் விடலாம். ஆனால், ஏல விவரங்களை தாய் மொழியில் உரிமையாளருக்கு தெரிவிக்க வேண்டும். ஏலம் நடந்தால், உபரித் தொகை 7 நாள்களுக்குள் அவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். கடனை முறையாக செலுத்திவிட்டால், நகைகளை 7 நாள்களுக்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும். SHARE IT

News November 14, 2025

ஜெயலலிதா வாட்ச் கலெக்‌ஷன் PHOTOS

image

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வலிமையான, தைரியமான பெண் அரசியல் தலைவர்களில் ஒருவர். தலைமை பண்பில் சிறந்து விளங்கியவர், வாட்ச் பிரியராகவும் இருந்துள்ளார். அவரிடம் ஏராளமான வாட்ச் கலெக்‌ஷன் இருந்துள்ளது. அதில், அவர் அணிந்திருந்த சில பிரபல வாட்ச்களை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!