News September 22, 2025
குழந்தை பெற்றுக் கொண்டால் ₹3 லட்சம் பரிசுத்தொகை

குழந்தையை பெற்றுக்கொண்டால் கூடுதல் சுமை என யோசிக்கும் பலர் உலகில் இருக்கதான் செய்கிறார்கள். ஆனால், தைவான் மக்கள் அப்படி யோசிக்க மாட்டார்கள். ஏனென்றால் அங்கு ஒரு குழந்தை பெற்றால் ₹3 லட்சம், இரட்டை குழந்தை பிறந்தால் ₹6 லட்சமும் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், தைவான் மக்கள் தொகையை அதிகரிக்க இத்திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
Similar News
News September 22, 2025
விஜய்யின் கூட்டம் வாக்குகளாக மாறாது: செல்லூர் ராஜு

நடிகர்களின் அரசியல் செல்வாக்கை கூட்டத்தை வைத்து மதிப்பிட முடியாது என விஜய் குறித்து செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். சிவாஜி, பாக்யராஜ், டி ராஜேந்தருக்கு கூடிய கூட்டம் இப்போது அட்ரஸே இல்லாமல் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். விஜய் ரசிகர்களைப் பக்குவப்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கூட்டம் வாக்குகளாக மாறாது என்ற கருத்தை நேற்று கமலும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News September 22, 2025
இன்று நவராத்திரி: இவற்றை கண்டிப்பாக பண்ணுங்க!

அம்பிகையை வீட்டிற்கு அழைத்து வரும் நவராத்திரி பண்டிகையில், செய்ய வேண்டிய சில காரியங்கள் உள்ளன *எப்போதும் இறை சிந்தனையிலேயே இருந்து, மனதையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் *தியானம், வழிபாடு ஆகியவற்றில் ஈடுபட வேண்டும் *கொலு வைத்தாலும், வைக்காவிட்டாலும் காலை & மாலையில் வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும் *முடிந்தவரை உடை, உணவு, பணம் ஆகியவற்றை கொடுத்து உதவலாம். SHARE IT.
News September 22, 2025
US தடையை இந்தியா வளர்ச்சியாக மாற்றலாம்: ஸ்ரீதர்

H-1B விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளதை இந்தியா சாதமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இதில் சவால்கள் இருந்தாலும் புதிய வாய்ப்புகள் அதிகமாக உருவாகும் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார். நமக்கு தேவையான ஊழியர்கள் உள்நாட்டில் இருக்கும் போது உள்நாட்டு கண்டுபிடிப்புகளை அதிகப்படுத்தி வளர்ச்சியடையலாம் என ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்.