News September 15, 2025

சத்குரு முகத்தை காட்டி ₹3.75 கோடி மோசடி

image

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் கோடிகளை அள்ளலாம் என்று சத்குரு பேசுவது போன்ற போலி வீடியோவை சமூகவலைதளத்தில் பெங்களூருவை சேர்ந்த பெண்(57) பார்த்துள்ளார். போலி AI என தெரியாமல், சத்குரு மீதான நம்பிக்கையில், சுமார் ₹3.75 கோடியை ஆன்லைன் டிரேடிங்கில் அப்பெண் முதலீடு செய்துள்ளார். ஆனால், லாபத்தை withdraw செய்ய முடியாததால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். மக்களே உஷார்!

Similar News

News September 15, 2025

சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர்

image

உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 1,000 மீ ஓட்டத்தில், இந்திய வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இவர், நேற்று நடைபெற்ற 500 மீ ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியிருந்தார். கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற உலக போட்டிகளின் 12-வது சீசனிலும் வெண்கலம் வென்றிருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த இவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.

News September 15, 2025

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி: ஹரி நாடார்

image

நாடார் மக்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளில், நாடார் வேட்பாளர்களை நிறுத்தி, அவர்களுக்காக குரல் கொடுக்கும் நபராக நாங்கள் இருப்போம் என்று ஹரி நாடார் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் சத்திரிய சான்றோர் படை கட்சி தனித்தே நிற்கும் என்ற அவர், கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என கூறியுள்ளார். 2021 தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட அவர், 37,727 வாக்குகள் பெற்றிருந்தார்.

News September 15, 2025

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் இலை

image

நீரிழிவு நோயாளிகள் எப்போதும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேப்பிலை உதவியாக இருக்கும். வேப்பிலையில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. வேப்பிலைகள் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் தினமும் 5-10 வேம்பு இலைகளை சாப்பிடுவதால் நல்ல பயன் கிடைக்கும். ஆனால் இந்த இலைகளை மருந்து அல்லது இன்சுலின் அளவிற்கு மாற்றாக கருத முடியாது.

error: Content is protected !!