News August 14, 2025
தூய்மை பணியாளர்களுக்கு ₹3.5 லட்சம் கடன்: தமிழக அரசு

தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் கைது செய்தது அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், CM தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு, பணியின்போது இறந்தால், குடும்பத்தினருக்கு ₹10 லட்சம், குழந்தைகளின் உயர்கல்விக்கு உதவி, தொழில் தொடங்க ₹3.5 லட்சம் கடன் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
Similar News
News August 14, 2025
மீண்டும் EPS-ஐ தாக்க தொடங்கிய OPS

இழிவான நடத்தை கொண்டவர் EPS என OPS சாடியுள்ளார். மேலும், தலைமை பண்பிற்கான அறிகுறி துளியும் இல்லாத EPS-யிடம் ADMK சிக்குண்டு கிடப்பதால் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாகவும், செல்லூர் ராஜு, தம்பிதுரை என ADMK மீண்டும் ஒன்றிணைய நினைக்கும் மூத்தத் தலைவர்களை குறிவைத்து அவர் அவமதிப்பு செய்து வருவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். நீண்ட காலம் அமைதி காத்த OPS மீண்டும் EPS-யை தாக்க தொடங்கியுள்ளார்.
News August 14, 2025
Office Laptop-ல் Whatsapp Login பண்ணாதீங்க..!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலியாக மாறிவிட்டது Whatsapp. ஆனால், ஆபீஸில் தரும் லாப்டாப்களில் Whatsapp-ஐ பயன்படுத்த வேண்டாம் என இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை எச்சரித்துள்ளது. அப்படி செய்தால் உங்களது அலுவலகம் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை எளிதில் தெரிந்துக்கொள்ள முடியுமாம். Screen Monitoring, Malware போன்ற விஷயங்களை கொண்டு உங்கள் தகவல்களை திருடமுடியும் என்கின்றனர். SHARE.
News August 14, 2025
தூய்மை பணியாளர்கள் விவகாரம்.. CMக்கு நெருக்கடி

தலைநகர் சென்னையில் 13 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கைது செய்ததற்கு திமுக கூட்டணி கட்சிகளே கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது ஜனநாயகத்திற்கு எதிரானது என விசிகவின் வன்னி அரசு தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக சிபிஎம் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளே கண்டனம் தெரிவித்து வருவது ஸ்டாலினுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.