News April 15, 2024

₹25,000 கோடிக்கு Green Bond வெளியாக வாய்ப்பு

image

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ₹20,000 கோடி முதல் ₹25,000 கோடி வரையிலான பசுமைப் பத்திரங்களை வெளியிட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இந்திய அரசின் பத்திரங்கள் மீது உலக முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், முதல் அரையாண்டில் பசுமைப் பத்திரங்கள் மூலம் ₹12,000 கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது ஆண்டு இறுதியில் ₹25,000 கோடி வரை இருக்கலாம்.

Similar News

News August 15, 2025

கூலி பட முதல் நாள் வசூல் சாதனை.. இவ்வளவு கோடியா?

image

நேற்று வெளியான ‘கூலி’ திரைப்படம் முதல் நாளில் சுமார் ₹140 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் ₹30 கோடியும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ₹65 கோடியும், வெளிநாடுகளில் ₹75 கோடி வரை வசூலித்திருக்கிறதாம். அடுத்த மூன்று நாள்கள் விடுமுறை என்பதால், வசூல் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. நீங்க படம் பாத்தாச்சா.. எப்படி இருக்கு?

News August 15, 2025

பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணியுங்கள்: ஹர்பஜன்

image

ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். எல்லையில் நமது இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்வதை ஒப்பிடும் போது ஒரு போட்டியை தவிர்ப்பது சிறிய காரியம் தான் என்றார். இருநாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளுக்கு முடிவு எட்டும் வரை பாகிஸ்தான் உடனான போட்டிகளை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

News August 15, 2025

வீரர்களின் கனவுகளை நனவாக்குவோம்: PM மோடி

image

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்துகளை மக்களுக்கு PM மோடி தெரிவித்துள்ளார். இந்நாள் தரும் ஊக்கத்தில் கடுமையாக உழைத்து நமது சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்குவோம் என தனது X தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் 12-வது முறையாக PM மோடி செங்கோட்டையில் கொடியேற்ற உள்ளார்.

error: Content is protected !!