News March 29, 2025

மக்களிடம் கொள்ளை போன ₹22,000 கோடி மீட்பு: பிரதமர்

image

மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ₹22,000 கோடி மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரவும், பகலும் விமர்சிக்கப்படும் ED-யால் இப்பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும், அப்பணத்தை திருடப்பட்டவர்களிடமே திரும்ப ஒப்படைத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், பொதுமக்களிடம் கொள்ளை அடித்தவர்கள், அதை மக்களிடமே திருப்பி கொடுக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

Similar News

News March 31, 2025

BREAKING: மதுரையில் பிரபல ரவுடி என்கவுண்ட்டர்

image

மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ரவுடி சுபாஷ் சந்திர போஸ் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோப்பில் கூட்டாளிகளுடன் இருந்த ரவுடியை பிடிக்க முயன்றபோது அவர் தாக்கியதால் என்கவுண்ட்டர் செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ரவுடி கிளாமர் காளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சுபாஷ் சந்திர போஸை போலீசார் தேடிவந்த நிலையில், சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

News March 31, 2025

சிறுமிக்கு கருக்கலைப்பு – சிக்கிய காதலனின் குடும்பம்

image

பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலுக்கு எப்போது தான் விடிவு காலம் பிறக்குமோ? சென்னையில் 15 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததால் காதலன், அவரது பெற்றோர், டாக்டர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காதலனின் அவசரத்தால் கர்ப்பமான சிறுமிக்கு, தனியார் ஹாஸ்பிடலில் காதலனின் குடும்பத்தினர் கருக்கலைப்பு செய்துள்ளனர். இதுதொடர்பாக போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

News March 31, 2025

யார் இந்த நிதி திவாரி?

image

பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக (personal secretary) நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். 2014 பேட்ச் IFS அதிகாரியான இவர், வாரணாசியை சேர்ந்தவர். 2023 முதல் பிரதமர் அலுவலகத்தில் Dy.secretary-யாக உள்ள இவர், வெளியுறவு விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர். அரசின் அயலுறவுக் கொள்கையில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்த அரசு நிர்வாக தொடரும் வரை (அ) அடுத்த அறிவிப்பு வரை, இவர் புதிய பதவியில் தொடருவார்.

error: Content is protected !!