News March 29, 2025
மக்களிடம் கொள்ளை போன ₹22,000 கோடி மீட்பு: பிரதமர்

மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ₹22,000 கோடி மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரவும், பகலும் விமர்சிக்கப்படும் ED-யால் இப்பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும், அப்பணத்தை திருடப்பட்டவர்களிடமே திரும்ப ஒப்படைத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், பொதுமக்களிடம் கொள்ளை அடித்தவர்கள், அதை மக்களிடமே திருப்பி கொடுக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
Similar News
News August 24, 2025
நகை கடன்.. முக்கிய அறிவிப்பு

நகை மதிப்பில் 90% வரை கடன் வழங்கும் திட்டத்தை சவுத் இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த வட்டி விகிதம், நெகிழ்வான திருப்பி செலுத்தும் விருப்பத் தேர்வுகளுடன் கடன் வழங்கப்படும் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்மூலம், ₹1 லட்சம் மதிப்புள்ள நகைகளுக்கு ₹90 ஆயிரம் வரை கடன் பெற முடியும். பொதுத்துறை வங்கிகள் 60 – 70% வரையும், நிதி நிறுவனங்கள் 75% வரையும் நகை கடன் வழங்குகின்றன. SHARE IT
News August 24, 2025
சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு?

தமிழக டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால், ஆக.29 உடன் ஓய்வு பெறுவதற்கான கோப்பில் CM ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், புதிதாக அமைக்கப்படவுள்ள தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக 2 ஆண்டுகளுக்கு அவரை நியமிக்கவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த டிஜிபி பரிந்துரையில் சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் உள்ளனராம்.
News August 24, 2025
JUSTIN: ககன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றி

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ(ISRO) தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படை, கடற்படையுடன் இணைந்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருந்து விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது அதன் வேகத்தைக் குறைக்கும் வகையில் இந்த பாராசூட் உருவாக்கப்பட்டுள்ளது.