News September 11, 2025
₹2,000 மகளிர் உரிமை தொகை.. வெளியான தகவல்

மகளிர் உரிமை தொகையை ₹2,000ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சாத்திய கூறுகளை ஆராய நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2026 தேர்தலில் அதிமுக வென்றால் ₹2,000 உரிமை தொகை வழங்கப்படும் என EPS தெரிவித்த நிலையில், ஆளும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நிதித்துறை சாதகமான அறிக்கை தந்தால் வரும் ஜன. முதல் உரிமை தொகை ₹2,000ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
Similar News
News September 11, 2025
7 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்ட நாயகன்: குல்தீப் கம்பேக்

ஆசிய கோப்பை தொடரில், தனது முதல் போட்டியை இந்தியா அதிரடியாக துவங்கியுள்ளது. குறிப்பாக, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் மிரட்டிவிட்டார். 7 ஆண்டுகளுக்கு பிறகு டி20 மேட்ச்சில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார். எனவே, அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால், இங்கி.,க்கு எதிரான தொடரில் விளையாடிய இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. நீங்க என்ன நினைக்கிறீங்க?
News September 11, 2025
மூலிகை: இது தெரிஞ்சா, துத்தி இலையை அள்ளி சாப்பிடுவீங்க!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
*துத்தி இலைகளை பச்சையாக சாப்பிட்டால் தசைகளை வலுப்பெறும்.
*துத்தி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, வாய் கொப்பளித்தால் ஈறுகளின் ரத்தப்போக்கு நீங்கும்.
*துத்தி இலைகளை நெய்யில் சாதத்துடன் சேர்த்து, 40- 120 நாட்கள் சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.
*துத்தி பூக்களை உலர்த்தி, நீரில் கலந்து குடித்து வந்தால் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். SHARE IT.
News September 11, 2025
கட்சி பொறுப்பில் இருந்து கூண்டோடு நீக்கம்

காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் உச்சம் தொட்ட நிலையில், கோவையில் 3 தலைவர்களை கூண்டோடு நீக்கி தலைமை உத்தரவிட்டுள்ளது. மாநகர் மாவட்ட தலைவர் கருப்புசாமி, வடக்கு மாவட்ட தலைவர் VMC மனோகரன், தெற்கு மாவட்ட தலைவர் N.K.பகவதி மூவரும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகளை குறிவைத்து தலைமை நகர்ந்தாலும், நிர்வாகிகளிடையே உள்கட்சி பூசல் விவகாரம் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.