News June 6, 2024

₹2000 கோடி பங்கு பிணைய பத்திரங்கள் ஏலம்: தமிழக அரசு

image

₹2000 கோடி மதிப்பிலான பங்கு பிணைய பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூன் 11இல் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில், காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை இந்த ஏலம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏலத்தில் கலந்துகொண்டு, தேவையான பங்குகளை விருப்பத்தின் அடிப்படையில் வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 6, 2025

தமிழகம் முழுவதும் நாளை வெடிக்கிறது போராட்டம்

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மேல்முறையீடு என்ற பெயரில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். தீபம் ஏற்ற அனுமதியளித்திருக்க வேண்டும். ஆனால், சிறுபான்மையினர் ஓட்டுக்காக அனுமதியளிக்கவில்லை. இதை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை (டிச.7) போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

News December 6, 2025

பக்தியை வைத்து பகை வளர்க்க கூடாது: சேகர்பாபு

image

பக்தியை வைத்து பகை வளர்க்க கூடாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றிய பின், மேலும் 5 இடங்களில் தீபம் ஏற்றுவோம் என்றால் ஏற்க முடியுமா? அதுபோல, திருப்பரங்குன்றத்தில் ஒரு இடத்தில் தீபம் ஏற்றிய பின் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சியின்போதும், தீபம் ஏற்றக்கூடாது என்றே அவர்கள் தெரிவித்து வந்ததாக விமர்சித்தார்.

News December 6, 2025

ரயிலில் உள்ள 5 இலக்க எண் எதை குறிக்கிறது தெரியுமா?

image

ரயில் பெட்டியின் 5 எண்களில், முதல் 2 எண்கள் ரயில் உருவான ஆண்டை குறிக்கிறது. கடைசி 3 எண்கள், கோச்சை குறிக்கிறது. 001-200: AC கோச், 201-400: 2nd Sleeper, 401-600: ஜெனரல், 601-700: Second Sitting, 701-800: லக்கேஜ், 801+: பேன்ட்ரி, ஜெனரேட்டர் கோச் ஆகும். உதாரணத்திற்கு, ‘08453’ என்றால் 2008-ல் உருவான ரயில், ஜெனரல் பெட்டி என அர்த்தம். மேலே உள்ள Photo எதை குறிக்கிறது என கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.

error: Content is protected !!