News May 2, 2024

RBI-க்குச் சொந்தமான ₹2,000 கோடி சிக்கியது

image

ஆந்திராவில் ₹2,000 கோடி கைப்பற்றப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 13ஆம் தேதி அங்குத் தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கஜராம்பள்ளியில் 4 கண்டெய்னர் லாரிகளைச் சோதனையிட்ட அதிகாரிகள் அவற்றில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் அந்தப் பணம் RBI-க்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.

Similar News

News November 16, 2025

தவெக + காங்., கூட்டணியா? செல்வப்பெருந்தகை பதில்

image

தவெக உடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக எழுந்த பேச்சுகளுக்கு செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார். ராகுல் காந்தியும், விஜய்யும் ரகசியமாக சந்தித்துக்கொண்டதாகவும், கூட்டணி குறித்து ஆலோசிப்பதாகவும் வரும் தகவல்கள் பொய் என அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். இவையெல்லாம், தனிப்பட்ட லாப நோக்கத்திற்காக சிலர் கிளப்பிவிடும் தகவல்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 16, 2025

மன அழுத்தத்தை குறைக்கும் 6 உணவுகள்!

image

ஒருவரின் உணவு பழக்கம் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வடிவமைக்கிறது. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளும்போது உடல் மட்டுமல்ல, மனதுக்கும் அது நன்மையை தருவதாக கூறுகின்றனர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள். சில எளியமையான, அன்றாட உணவுகள் மன அழுத்தத்தை சரி செய்யவும், சமநிலையை பராமரிக்கவும் உதவுவதாக அவர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்பதை அறிய மேலே SWIPE பண்ணி பாருங்க…

News November 16, 2025

மீண்டும் பிஹார் CM ஆகிறாரா நிதிஷ்?

image

நிதிஷ்குமாரையே பிஹார் CM நாற்காலியில் அமரவைக்க NDA கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவ.19-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் எனவும், இதில் PM மோடி மற்றும் பாஜக CM-கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நிதிஷ் குமார் தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை நடக்கவிருப்பதாகவும் பேசப்படுகிறது. மேலும், DCM-மாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

error: Content is protected !!