News May 2, 2024
RBI-க்குச் சொந்தமான ₹2,000 கோடி சிக்கியது

ஆந்திராவில் ₹2,000 கோடி கைப்பற்றப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 13ஆம் தேதி அங்குத் தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கஜராம்பள்ளியில் 4 கண்டெய்னர் லாரிகளைச் சோதனையிட்ட அதிகாரிகள் அவற்றில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் அந்தப் பணம் RBI-க்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.
Similar News
News August 20, 2025
மு.க.தமிழரசு ஹாஸ்பிடலில் அனுமதி

CM ஸ்டாலினின் சகோதரர் மு.க.தமிழரசு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைச்சுற்றல், மயக்கம் காரணமாக அவர் சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரியிலும் உடல்நலக் குறைவால் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இவர் நேரடி அரசியலில் இல்லையென்றாலும், உதயநிதி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
News August 20, 2025
தமிழகம் முழுவதும் NIA சோதனை

கொடைக்கானல், தென்காசி ஆகிய பகுதிகளில் 10 இடங்களில் NIA சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக, திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் உள்ள ஷேக் அப்துல்லா (SDPI), ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த யூசிப் ஆகியோரது வீடுகளிலும் NIA சோதனை நடைபெற்று வருகிறது. பாமகவின் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இச்சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 4 மாதங்களுக்கு முன்பு கொடைக்கானலில் NIA சோதனை நடத்தியது.
News August 20, 2025
CPR வென்றால் தமிழர்களுக்கு பெருமை: பிரேமலதா

NDA கூட்டணி வேட்பாளர் CPR வெற்றி பெற்றால் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் பெருமை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் மக்கள் மத்தியில் பேசிய அவர், திமுக ஆட்சியில் நிறைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, அதே சமயம் பல திட்டங்கள் நிறைவேற்றியிருப்பதாகவும் கூறினார். கூட்டணி குறித்து ஜனவரியிலேயே அறிவிப்பதாக கூறியுள்ள தேமுதிக, NDA வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.