News March 18, 2025
வங்கிகளில் ₹16.35 லட்சம் கோடி வாராக்கடன் விலக்கு

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வங்கிகள் ₹16.35 லட்சம் கோடி வாராக்கடன்களை, தங்கள் வங்கியின் நிதிநிலை அறிக்கையில் இருந்து விலக்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இக்கடன்கள் தள்ளுபடியல்ல என்றும், அவற்றைத் திரும்ப வசூலிக்க வங்கிகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். இந்த வாராக்கடனில் பெருநிறுவனங்களின் பங்கு மட்டும் ₹9.27 லட்சம் கோடி ஆகும்.
Similar News
News July 7, 2025
8 இடங்களில் சதமடித்த வெயில்… கவனம் தேவை மக்களே!

தமிழகம், புதுச்சேரியில் வெப்பநிலை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இன்று சென்னை, வேலூர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 இடங்களில் வெயில் சதமடித்து (100 டிகிரி பாரன்ஹீட்) மக்களை வாட்டி வதைத்துள்ளது. இந்நிலையில், மேலும் 2 நாள்களுக்கு வெயில் 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது. இதனால், வீட்டில் இருந்து பகல் 11 மணி – மதியம் 3 வரை வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே..!
News July 7, 2025
2001 தேர்தலை மறந்தாச்சா? திமுகவுக்கு EPS கேள்வி

பாஜகவுடன் கூட்டணி வைப்பதை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலினுக்கு, பழைய சம்பவம் மறந்துவிட்டதா எனக் கேட்டுள்ளார் இபிஎஸ். 1991-ல் பாஜகவோடு கூட்டணி வைத்தீர்களா இல்லையா? 2001 தேர்தலில் கூட்டணி வைத்தீர்களா இல்லையா? நீங்கள் கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி. நாங்கள் கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா? என்றதுடன், நாட்டுக்கு நல்ல திட்டங்கள் தரும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
News July 7, 2025
ரெஸ்ட் எடுங்க பாஸ்…ஆனால்?

ஓய்வு நேரம் குறைந்தால், மன அழுத்தம் அதிகரிக்கும் ஆபத்து அதிகம் என அமெரிக்காவின் ஓஹியோ பல்கலை., நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறைந்த ஓய்வு எடுப்பவர்கள், குறைந்த அளவிலேயே மகிழ்ச்சியை அனுபவித்து வருகின்றனராம். அதேநேரம், அளவுக்கு அதிகமாக ஓய்வு எடுப்பதும் உடல், மன நலத்தை பாதிக்குமாம். அதீத ஓய்வால் பிபி, மன அழுத்தம், தூக்கமின்மை, அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். ஆகவே அவசியம் ஓய்வெடுங்க.. அளவாக!