News January 6, 2025

பத்திரப்பதிவு மூலம் ₹15,000 கோடி வருவாய்

image

தமிழகத்தில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பத்திரப்பதிவு மூலம் ₹15,000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட ₹2,000 கோடி அதிகமாகும். 25 லட்சத்து 3,365 ஆவணங்களை பத்திரப்பதிவு செய்ததன் மூலம் இந்த வருவாய் ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Similar News

News January 17, 2026

24 மணி நேரமாக சைலண்டாக இருக்கும் டிடிவி

image

NDA கூட்டணியில் அமமுக இணைய தயக்கம் காட்டுவதாக செய்தி வெளியான, அடுத்த ஒரு மணி நேரத்தில் TTV விளக்கமளித்திருந்தார். ஆனால், நேற்று NDA கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்திற்கான வரவேற்பு பதாகையில் <<18840967>>போட்டோ <<>>இடம்பெற்றது குறித்து, 24 மணி நேரமாகியும் இதுவரை அவரது தரப்பில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், EPS தலைமையிலான கூட்டணியை ஆதரிக்க TTV முடிவு எடுத்துவிட்டாரா என கேள்வி எழுந்துள்ளது.

News January 17, 2026

நாளை தை அமாவாசை.. வீட்டில் கட்டாயம் இதை செய்யுங்க

image

*தர்ப்பணம் செய்த பின் வீட்டிற்கு திரும்பி சென்று முன்னோரின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு, கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சார்த்த வேண்டும். *முன்னோர்கள் பயன்படுத்திய பொருள்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். *முன்னோர்களுக்கு பிடித்த இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். *வீட்டில் தெய்வம் சம்பந்தமான பூஜைகளை தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை ஒத்திவைக்க வேண்டும்.

News January 17, 2026

துடைத்து எறியப்பட்ட காங்., மறுபரிசோதனை செய்யுமா?

image

மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட 25 மாநகராட்சிகள், 207 நகராட்சிகளை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. ஆனால், காங்., படுதோல்வியடைந்து துடைத்து எறியப்பட்டிருகிறது. இத்தேர்தல் முடிவு, காங்., கட்சியினர் தங்களை மறுபரிசோதனை செய்வதற்கான முக்கிய காலகட்டத்தில் இருப்பதை வெளிக்காட்டுவதாகவும், மக்கள் பிரச்னையை கையில் எடுத்து களமாட வேண்டும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!