News August 21, 2025
பள்ளி மாணவர்களுக்கு ₹1,500.. நாளை முதல் ஆரம்பம்!

நடப்பாண்டு 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு அக்.10-ல் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. இதில், தேர்வாகும் 1,500 மாணவர்களுக்கு மாதம் ₹1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in இணையதளத்தில் நாளை(ஆக.22) முதல் செப். 4-ம் தேதி வரை டவுன்லோடு செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ₹50 கட்டணத்துடன் HM-களிடம் ஒப்படைக்க வேண்டும். SHARE IT.
Similar News
News January 14, 2026
சற்றுமுன்: 38 பேர் பலி.. பெரும் துயரம்

ஆப்பிரிக்காவின் மாலி நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து 38 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாலியில் உள்ள நைஜர் நதி நகரத்தில் இருந்து, இரவு நெல் அறுவடை செய்த தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஏற்றிக் கொண்டு சென்ற படகு பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 38 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்களை பார்த்து, உறவினர்கள் கதறி துடிக்கும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது.
News January 14, 2026
வடநாட்டு பெண்கள் குறித்து தயாநிதி சர்ச்சை பேச்சு

தமிழகத்தில் பெண்களை படிக்கச் சொல்லும்போது, வட இந்தியாவில் பெண்களை வீட்டு அடுப்படியில் இருங்கள், குழந்தை பெற்றுக்கொடுங்கள் எனக் கூறுவதாக கல்லூரி விழாவில் தயாநிதி மாறன் பேசியிருந்தார். இது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து BJP தலைவர் அனிலா சிங், அறிவு இல்லாமல் மாறன் மீண்டும் வட இந்திய பெண்களை அவமதித்துள்ளார். DMK-ல் இது வழக்கமானது என்றாலும், இதுபோன்று பேச எப்படி அனுமதிக்கப்படுகிறது என சாடியுள்ளார்.
News January 14, 2026
விடுமுறை காலத்திலும் ₹10,000: அன்பில் மகேஸ்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு தற்காலிகமாக மட்டுமே ₹2,500 உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் <<18854282>>அன்பில் மகேஸ்<<>> தெரிவித்துள்ளார். மேலும், பகுதி நேர ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையான ‘முழுநேர ஊழியராக மாற்றம் செய்யப்பட வேண்டும்’ என்பதை சட்டவல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், மே மாதம் விடுமுறை காலத்தில் ஊதியமாக ₹10,000 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


