News March 15, 2025

பயிர்க் கடன் தள்ளுபடிக்கு ₹1,472 கோடி ஒதுக்கீடு: அமைச்சர்

image

2025 – 26 நிதியாண்டில் விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய ₹1,472 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் ₹10,346 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ₹215லிருந்து ₹349ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

Similar News

News March 15, 2025

வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி மேலும் குறைகிறது

image

ரெப்போ வட்டி விகிதத்தை அண்மையில் 0.25 புள்ளிகள் ரிசர்வ் வங்கி குறைத்தது. இதை பின்பற்றி, வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைத்தன. இந்நிலையில், பணவீக்கத்திற்கு ஏற்ப ஏப்ரல், ஜூன், அக்டோபரில் தலா 0.25 புள்ளிகள் என 0.75 புள்ளிகள் ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கக்கூடும் என எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது. அப்படி குறைத்தால், வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி மேலும் குறையக்கூடும்.

News March 15, 2025

ENG எதிரான டெஸ்ட்: கேப்டனாக ரோஹித் தொடர்வாரா?

image

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரோஹித் ஷர்மா கேப்டனாக தொடர்வார் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர் தோல்வி காரணமாக AUS எதிரான BGT தொடரின் கடைசி டெஸ்டில் ரோகித் பங்கேற்காமல் வெளியேறினார். இதனால் டெஸ்ட் கேப்டனாக அவரது எதிர்காலம் குறித்த விவாதம் எழுந்தது. இதற்கிடையே, CT கோப்பையை IND கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித்தை நியமிக்க BCCI நிர்வாகிகள் விரும்புவதாக கூறப்படுகிறது.

News March 15, 2025

பச்சைத்துண்டு போட்டால் என்ன?

image

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனதை முன்னிட்டு திமுக MLAக்கள் அனைவரும் பச்சைத்துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, துரை முருகன், பெரிய கருப்பன், நேரு ஆகிய முன்னணி அமைச்சர்கள் மட்டும் பச்சைத்துண்டு அணியவில்லை. இதனை சோசியல் மீடியாவில் பகிரும் எதிர்க்கட்சியினர் தாங்களும் பச்சைத்துண்டு போட்டால் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர்.

error: Content is protected !!