News September 14, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. முடிவுக்கு வந்த காத்திருப்பு

புதிதாக 17 லட்சத்திற்கும் அதிகமானோர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 9 லட்சம் பேர் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என DCM உதயநிதி அறிவித்துள்ளார். தீபாவளி பரிசாக அவர்களது வங்கிக் கணக்கில் அடுத்த மாதம் 15-ம் தேதி ₹1,000 வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனர்களின் எண்ணிக்கை 1.24 கோடியாக அதிகரிக்கும்.
Similar News
News September 15, 2025
மழைக்காலத்தில் இவற்றை செய்யுங்கள்

ஒவ்வொரு சீசனுக்கு ஏற்ப தலைமுடியை பராமரிப்பது அவசியம். மழைக்காலத்தில் பின்வரும் யோசனைகளை பின்பற்றலாம்: ➤முடிக்கு வண்ணம் பூசுவதை தவிர்க்கவும் ➤எண்ணெய்யை லேசாக சூடேற்றி, முடி வேர்க்கால்களை மசாஜ் செய்யவும் ➤தலைக்கு குளிக்க வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தவும் ➤ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
News September 15, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 15, 2025
ஹாக்கியில் சீனாவிடம் இந்தியா படுதோல்வி

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் ஹாக்கி அணி சீனாவிடம் 4-1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்தியா முதல் கோலை அடித்து சீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. பின்னர் சுதாரித்துக்கொண்ட சீனா அடுத்தடுத்து கோல்(4) மழை பொழிந்து இந்தியாவை திக்குமுக்காட வைத்தது. இந்த தோல்வியால் இந்தியா நேரடியாக WC-க்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.