News September 26, 2025
₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. அரசின் புதிய அப்டேட்

மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்துவிட்டு காத்திருப்போருக்கு DCM உதயநிதி புதிய அப்டேட் கொடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், இன்னும் 2 மாதங்களில் தகுதிவாய்ந்தோருக்கு உரிமைத்தொகை ₹1,000-ஐ CM ஸ்டாலின் நிச்சயம் கொடுப்பார் என்றார். முன்னதாக ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத்தொகைக்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அரசு கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News January 5, 2026
ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? நம்பரும் தெரியாதா?

ஆதார் கார்டு இல்லாமல் எந்த அரசு சேவையையும் பெற முடியாது. இந்நிலையில், ஆதார் கார்டும் தொலைந்துவிட்டது, 12 இலக்க நம்பரும் தெரியவில்லை என்றால் என்ன செய்வது? கவலை வேண்டாம். அதற்கு, UIDAI இணையதளம் சென்று, Aadhaar Service-ஐ தேர்வு செய்யவும். அதில் Retrieve Aadhar ஆப்ஷனை கிளிக் செய்து, அங்கு உங்களின் பெயர், மொபைல் நம்பர், முகவரி விவரங்களை உள்ளிட்டால், உங்களின் ஆதார் கார்டு எண் கிடைக்கும். SHARE IT!
News January 5, 2026
தங்கம், வெள்ளி.. விலை ₹8,640 உயர்ந்தது

ஆபரணத் <<18766340>>தங்கம் <<>>சவரனுக்கு ₹640 உயர்ந்த நிலையில், வெள்ளி விலையும் கிடுகிடுவென்று அதிகரித்துள்ளது. இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ₹8 உயர்ந்து ₹265-க்கும், கிலோ வெள்ளி ₹8,000 உயர்ந்து ₹2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை விலை எதிரொலியால், வரும் நாள்களில் நம்மூரிலும் விலை தாறுமாறாக உயரும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
News January 5, 2026
EPS-க்கு அருகதை இருக்கா? சிவசங்கர்

திமுகவை கார்ப்பரேட் கம்பெனி என கூறும் அதிமுக, எப்போதோ அடிமை கம்பெனியாக மாறிவிட்டதாக அமைச்சர் சிவசங்கர் சாடியுள்ளார். 55,000 லேப்டாப்களை வழங்காமல் வீணடித்த EPS-க்கு, திமுக அரசின் லேப்டாப் திட்டத்தை பற்றி பேச அருகதை இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு திட்டங்கள் தன்னால் தான் நடந்தது எனக்கூறி வரும் EPS, ‘நானே எல்லாம் செய்பவன்’ என்ற கடவுள் மனப்பான்மையில் வாழ்ந்து வருவதாகவும் விமர்சித்தார்.


