News April 12, 2024
திங்கட்கிழமை ₹1000 வரவு வைக்கப்படும்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ₹1000 திங்கட்கிழமை (ஏப்ரல் 15) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். தற்போது தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால் பணம் வருமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், பணம் கொடுக்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் நிலையில் விரைவில் பணம் வரவு வைக்கப்படவுள்ளது.
Similar News
News November 8, 2025
‘Sorry அம்மா, அப்பா.. நான் செத்துப் போறேன்’

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் உ.பி.யைச் சேர்ந்த முகமது ஆன் (21) என்ற மாணவர், ராவத்பூரில் உள்ள விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘அம்மா, அப்பா தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன். இதற்கு நான் முழு பொறுப்பு’ என்று எழுதப்பட்ட தற்கொலை கடிதத்தை போலீசார் மீட்டுள்ளனர்.
News November 8, 2025
X-Ray பிறந்த நாள் இன்று!

உடலை அறுக்காமலேயே, உள்ளே உள்ள பிரச்னைகளை எளிதாக கண்டறிய அதிகம் பயன்படுத்தும் ஒன்று X-Ray. நவ.8, 1895-ல், ஜெர்மானிய விஞ்ஞானி Wilhelm Conrad Rontgen இந்த கதிர்களை கண்டுபிடித்தார். கேத்தோடு கதிர்களை பரிசோதனை செய்தபோது, ஒரு கதிர் மட்டும் அட்டை வழியாக பாய்வதை கண்டார். தன் மனைவியின் கை எலும்புகளையே அவர் முதல் X-Ray படமாக பதிவு செய்தார். இதற்காக 1901-ல் அவர் இயற்பியலில் முதல் நோபல் பரிசை பெற்றார்.
News November 8, 2025
தாத்தாவானார் அன்புமணி

அரசியலில் இளைஞர் போல் ஆக்டிவ்வாக இருக்கும் பாமக தலைவர் அன்புமணி தாத்தாவும், செளமியா பாட்டியாகவும் அந்தஸ்து பெற்றுள்ளனர். ஆம்! அன்புமணியின் 2-வது மகள் சங்கமித்ராவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சினிமா தயாரிப்பாளரான சங்கமித்ரா, கடந்த 2024 தேர்தலின்போது, செளமியாவுக்கு ஆதரவாக வீடுவீடாக பரப்புரை செய்து கவனத்தை ஈர்த்தவர். பாமகவின் அடுத்த அரசியல் வாரிசு இவர்தான் என பேச்சு அடிபடுவது குறிப்பிடத்தக்கது.


