News August 9, 2024
மாணவர்களுக்கு மாதம் ₹1,000 திட்டம் இன்று தொடக்கம்

அரசு பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ₹1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை கோவை அரசு கலைக்கல்லூரியில் இன்று காலை 11.15 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதையடுத்து, இத்திட்டத்தில் தேர்வான மாணவர்கள் வங்கி கணக்கில் உடனடியாக ₹1,000 செலுத்தப்படும். இதன் மூலம் 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இத்திட்டத்துக்கு தமிழக அரசு ₹360 கோடி ஒதுக்கியுள்ளது.
Similar News
News November 3, 2025
இந்தியாவின் அண்டை நாடுகள் அணு ஆயுத சோதனை

சீனாவும், பாகிஸ்தானும் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதை குறிப்பிட்டு, அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடத்த உள்ளதை வெளிப்படையாக அறிவித்ததை நியாயப்படுத்தியுள்ளார். மேலும், ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் மூளும் அபாயம் இருந்ததாகவும், தான் குறுக்கிடவில்லை என்றால் பல உயிர்கள் கொல்லப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
‘இரவு 12 மணி’: மம்தாவை வறுத்தெடுத்த பாஜக

மே.வங்க வன்கொடுமை சம்பவத்தின் போது, இரவு 8 மணிக்கு மேல் மாணவிகளை வெளியே அனுமதிக்க கூடாது என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்த மம்தா பானர்ஜியை, பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. “யாரும் இரவில் வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தியிருந்தீர்கள். ஆனால், நம் வீராங்கனைகள் இரவு 12 மணி வரை விளையாடினார்களே!” என்று X-ல் பதிவிட்டுள்ளது.
News November 3, 2025
புயல் சின்னம்.. மழை பொளந்து கட்டும்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், வட தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், நவ.9 வரை தமிழகத்தில் மழை தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்க!


