News April 6, 2024
வங்கிக் கணக்கில் வருகிறது ₹1000

தேசிய திறனறி தகுதித் தேர்வில் வெல்லும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. 8ம் வகுப்பில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 9-12ஆம் வகுப்பு வரை மொத்தம் ₹48000 வழங்கப்படும். மாதந்தோறும் 7ஆம் தேதி மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில், நாளை இந்தத் தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, நாளை கிடைக்காவிட்டால் திங்கட்கிழமை வரவு வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News January 17, 2026
விஜய் கட்சியில் இணைந்த அடுத்த அதிமுக தலைவர்

அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட EX MLA புரசை V.S.பாபு தவெகவில் இணைந்துள்ளார். 2008 காலக்கட்டத்தில் திமுக மா.செ.வான புரசை வி.எஸ்.பாபு, அதிமுக மா.செ.வாக இருந்த சேகர்பாபுவை எதிர்த்து அரசியல் செய்தவர். 2011-ல் சேகர்பாபு திமுகவில் இணைந்ததால், வி.எஸ்.பாபு அதிமுகவுக்கு தாவினார். தற்போது மா.செ பதவி பறிக்கப்பட்டதால், செங்கோட்டையனுக்கு ஆதரவாக தவெகவில் ஐக்கியமாகி இருக்கிறார்.
News January 17, 2026
திங்கள்கிழமை.. வந்தாச்சு மகிழ்ச்சியான செய்தி

₹3,000 அடங்கிய தமிழக அரசின் பொங்கல் பரிசை இதுவரை 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுள்ளனர். ஆனால் பொங்கலுக்காக ஊருக்கு சென்றவர்கள் பொங்கல் பரிசை பெற முடியாமல் உள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை (ஜன.19) முதல் விடுபட்டவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும், மறுஅறிவிப்பு வரும் வரை பொங்கல் பரிசு விநியோகம் தொடரும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 17, 2026
ஊருக்கே ஊற்றிக் கொடுத்த திமுக அரசு: நயினார்

பொங்கல் பண்டிகையில் ₹518 கோடிக்கு மது விற்பனையானதை சுட்டிக்காட்டி, உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது அறிவாலய அரசு என்று நயினார் விமர்சித்துள்ளார். பொங்கலுக்கு ₹3000 கொடுக்கிறோம் என ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துவிட்டு, அந்தப் பணத்தை டாஸ்மாக் வாயிலாக வசூலித்துள்ளது திமுக அரசு என சாடிய அவர், இதுபோன்ற ஒரு அரசு இனி தப்பித்தவறி கூட தமிழகத்தை ஆளக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.


