News October 1, 2025
₹1000 அபராதம் … வந்தது அறிவிப்பு

ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட தொடர் விடுமுறையையொட்டி, பயணிகளை கண்காணிக்க தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ரயில்களில் முன்பதிவு டிக்கெட் இல்லாமல் பயணித்தால், ₹1000 வரை அபராதம் விதிக்கப்படும். ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே எச்சரித்துள்ளது. இதற்கு 50 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Similar News
News October 1, 2025
முதுகு வலிக்கு இந்த யோகாசனம் பண்ணுங்க!

➤சம்மணங்கால் போட்டு அமரவும். முதுகை சாய்த்து, பின்னால் படுக்கவும் ➤தலை தரையில் படும்படி இருக்க, மார்பை மேல் நோக்கி தூக்கவும் ➤
➤மடித்து வைத்திருக்கும் பாதங்களின் மேல், இரு கைகளையும் வைத்து, உடலை பேலன்ஸ் பண்ணவும் ➤இந்த நிலையில், 25- 30 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும் ➤மத்ஸ்யாசனம் செய்வதால் மார்பு நன்றாக விரிவடைவதுடன், முதுகு பிரச்னை தீரும். SHARE IT.
News October 1, 2025
சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தனர்

2026 தேர்தல் வரவிருக்கும் நிலையில், மாற்றுக்கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்க ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நாமக்கல் முன்னாள் மா.செ நதிராஜவேல், கொமதேக நாமக்கல் மாவட்ட துணைச் செயலாளர் ஜெயகுமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். கொமதேகவின் அங்கீகாரத்தை ECI சமீபத்தில் ரத்து செய்திருந்தது.
News October 1, 2025
அதிகரிக்கும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்

2023-ல் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் 1,77,335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2022-ஐ காட்டிலும் 9.2% அதிகம் என NCRB அறிக்கை தெரிவிக்கிறது. இதன்படி, ஒரு லட்சம் குழந்தைகளில் 39.9 பேர் குற்றங்களுக்கு உள்ளாவதாக அறிக்கை கூறுகிறது. 2021-ல் 1,49,404 குற்ற வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2022-ல் 1,62,449 ஆக உயர்ந்திருந்தது.