News September 21, 2025
சபரிமலையை மேம்படுத்த ₹1,000 கோடி

சபரிமலை வளர்ச்சி பணிகளுக்காக மாஸ்டர் பிளான் திட்டம் வகுக்கப்பட்டு, ₹1,000 கோடி செலவிடப்படும் என கேரளா CM பினராயி விஜயன் அறிவித்துள்ளார். ஆன்மிக மற்றும் சன்னிதானத்தின் கலாசார புராதனங்களை பாதிக்காத வகையில், 2039-க்குள் இந்த வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும், சபரிமலை ரயில்வே, விமானநிலையம், ரோப்கார் சேவை என பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News September 21, 2025
மகளிர் ODI போட்டியில் புது வரலாறு

நேற்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற மகளிர் ஒருநாள் போட்டியில், புதிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் இணைந்து அடித்த அதிகபட்ச ஸ்கோரை (781) அந்த அணிகள் பதிவு செய்துள்ளன. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 412 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 369 ரன்களை அடித்தது. இதற்கு முன்பு ENG – SA அடித்த 678 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
News September 21, 2025
தசைகள் வலுபெற இந்த யோகாவை டெய்லி பண்ணுங்க!

*கால்களை 2 அடி அகற்றியபடி, கைகளை பக்கவாட்டில் நேராக நீட்டி நிற்கவும் *மூச்சை வெளிவிட்டு கொண்டு இடது கையால் வலது கால் பெருவிரலைத் தொடவும் *பின் மெதுவாக மூச்சை உள் இழுத்து பழைய நிலைக்கு திரும்பி, மூச்சை வெளிவிடவும் *இதேபோல் மூச்சை வெளியிட்டு வலது கையால் இடது காலை தொடவும் *இதை தினமும் செய்து வந்தால் உடல் தசைகள் வலுப்பெறும். SHARE IT.
News September 21, 2025
TN-ஐ பேசாமல் காசாவை பற்றி பேசுவதா? தமிழிசை

பாலஸ்தீனத்தில் மனித உரிமைகள் மீறல் நடப்பதாக, சமீபத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு பேரணி நடத்தியது. அதில் பேசியவர்கள், காசாவில் நடக்கும் பிரச்னைக்கு PM மோடியை காரணம் காட்டியதாக தமிழிசை சௌந்தரராஜன் சாடியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது இவர்கள் எங்கே போனார்கள் எனவும், முதலில் தமிழகத்தில் நடக்கும் அவலங்களை பற்றி பேச வேண்டும் எனவும், அவர் விமர்சித்துள்ளார்.