News November 3, 2025
₹1,000 கோடியை தொட்ட நன்கொடை.. CM நன்றி

‘நம்ம ஸ்கூல் நம்ம ஊருபள்ளி’ திட்டத்திற்கான நிதி ₹1,000 கோடியை தொட்டதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு நிதியுதவி அளித்த 885 நிறுவனங்கள் & 1,500 நன்கொடையாளர்களுக்கு அவர் நன்றி கூறியுள்ளார். மேலும், இந்த நிதியின் மூலம் ஆயிரக்கணக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அரசு பள்ளிகளில் நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையின் நன்மை

*காலை நேரத்தில் ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையை சாப்பிடுவதால் உடலில் இரும்புச் சத்து குறைபாட்டை போக்க முடியும். *இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் மேம்படும். *இது உடலில் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. *உடலின் ரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சுதல் ஒழுங்குபடுவதால், டைப் 2 நீரிழிவு நோயின் அபாயம் குறைகிறது. *சரும பிரச்னைகளை தீர்த்து இயற்கையான பொலிவை வழங்குகிறது. *உடலில் எனர்ஜி அதிகரிக்கிறது.
News November 4, 2025
Chat Gpt-ல் மருத்துவம், சட்ட ஆலோசனைகள் நிறுத்தம்

Chat Gpt-ஐ இனி கல்வி தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Chat Gpt மருத்துவம், சட்டம் மற்றும் நிதி சார்ந்தவற்றில் ஆலோசனைகளை வழங்காது என Open AI நிறுவனம் கூறியுள்ளது. Chat Gpt பயன்படுத்தி பலரும் மருத்துவரை நாடாமல் தாங்களாக சிகிச்சை எடுப்பது உயிருக்கு ஆபத்தாக மாறும் காரணத்தினால், Open AI நிறுவனம் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
News November 4, 2025
விவசாயிகளுக்கு அதிக யூரியா தந்துள்ளோம்: மத்திய அரசு

காரீப் பருவத்திற்காக விவசாயிகளுக்கு போதுமான அளவு யூரியா, உரங்களை வழங்கியுள்ளதாக மத்திய அரசின் உரங்கள் துறை தெரிவித்துள்ளது. 185.39 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவை என கணக்கிட்ட நிலையில், 230.53 லட்சம் மெட்ரிக் டன் இருப்பு உறுதி செய்யப்பட்டு, 193.20 லட்சம் மெட்ரிக் டன் விற்கப்பட்டதாக கூறியுள்ளது. இது கடந்த ஆண்டில் பயன்படுத்தியதை விட 4.08 லட்சம் மெட்ரிக் டன் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


