News January 14, 2026
₹1,000 உரிமைத் தொகை உயர்வு.. மகிழ்ச்சியான செய்தி

₹1,000 மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதுதொடர்பாக அமைச்சரும் விரைவில் இனிப்பான செய்தி வரும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகையை 50% உயர்த்தி ₹1,500 ஆக வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பையும் CM ஸ்டாலின் பொங்கல் தினமான நாளை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
Similar News
News February 9, 2026
சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தனர் PHOTO

தேர்தல் நெருங்குவதால், மாற்று கட்சியினர் மற்றும் அமைப்புகளை தங்கள் கட்சியில் இணைக்க பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், தஞ்சை ஆவூர் ஜமாஅத் தலைவர் ஹசன் பசீர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் EPS-ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். அவர்களை கட்சி துண்டு போர்த்தி வரவேற்ற EPS, அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டார்.
News February 9, 2026
₹24,000 கோடி மதிப்பிலான உலகின் மிகப்பெரிய வீடு!

₹24,000 கோடி மதிப்பிலான உலகின் மிகப்பெரிய வீடுகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் அரண்மனை வதோதராவில் அமைந்துள்ளது. இது 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கெய்க்வாட் அரச குடும்பத்திற்காக பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் ராபர்ட் சிசோம் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அரண்மனையில் 170 அறைகள், அருங்காட்சியகங்கள், தோட்டங்கள், ரவிவர்மா ஓவியங்கள் மற்றும் ஒரு கோல்ஃப் கிளப் உள்ளன.
News February 9, 2026
ரோஹித், கோலியை B பிரிவுக்கு மாற்றிய BCCI

BCCI வருடாந்திர வீரர் ஒப்பந்தங்களை அறிவித்துள்ளது. இதுவரை A+ பிரிவில் இருந்த ரோஹித், கோலி இருவரும் கிரேடு B-ல் சேர்க்கப்பட்டுள்ளனர். பும்ரா, கில் மற்றும் ஜடேஜா ஆகியோர் கிரேடு A-ல் உள்ளனர். ரோஹித் மற்றும் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதால் அவர்களுக்கு கிரேட் குறைக்கப்பட்டு உள்ளது. இதற்குமுன் இருந்த A+ பிரிவை ஒட்டுமொத்தமாக BCCI நீக்கியுள்ளது.


