News May 13, 2024
ஜூலை 1 முதல் மகளிருக்கு ₹1 லட்சம்

தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1 லட்சம் தர உள்ளதாகவும், INDIA கூட்டணி வெற்றிபெற்றதும் ஜூலை 1 முதல் இந்த பணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Similar News
News August 7, 2025
ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்

*ஒற்றையாக இருக்கும் பூ, ஏராளமாக இருக்கும் முட்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டியதில்லை. *இந்த உலகை நாம் தவறாகப் படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுகிறது என்று சொல்கிறோம். *உங்கள் சொந்த ஆன்மாவில் நீங்கள் கடவுளைக் கண்டுபிடிக்கும் வரை, இந்த முழு உலகமும் உங்களுக்கு அர்த்தமற்றதாகத்தான் தோன்றும். *வெறுமனே தண்ணீரை உற்றுப்பார்த்துக்கொண்டே நிற்பதன் மூலம் உங்களால் கடலைக் கடக்க முடியாது.
News August 7, 2025
வாடகைக்கு மட்டுமே ₹1,500 செலவு: PM வருத்தம்

டெல்லியில் 50 வெவ்வேறு இடங்களில் பல மத்திய அமைச்சகங்கள் இயங்கி வருவதாக PM மோடி தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் கால கட்டிடங்களில் போதிய வசதிகள் இன்றி அமைச்சகங்கள் செயல்பட்டு வருவதாகவும், இவற்றிற்கு வாடகை ₹1,500 கோடி செலவாவதாகவும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார். ஆனால், ‘விக்ஷித் பாரத்’ தொலைநோக்கு பார்வையின் ஒருபகுதியாக புதிய கட்டிடங்களுக்கு அமைச்சகங்கள் மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
இனவெறி.. 6 வயது இந்திய சிறுமி மீது தாக்குதல்

அயர்லாந்தில் இனவெறி காரணமாக இந்தியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் பிறப்புறுப்பிலும், சைக்கிளை ஏற்றி 12-14 வயது சிறுவர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அயர்லாந்தில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட 5வது தாக்குதலாகும். முன்னதாக, ஆஸ்திரேலியாவிலும் இந்தியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.