News December 10, 2025
₹1.5 கோடி ஜாக்பாட்.. ஊரை விட்டே ஓடிய குடும்பம்!

பஞ்சாப்பில் கூலி வேலை செய்யும் நசீப் கவுருக்கு லாட்டரியில் ₹1.5 கோடி பரிசு விழுந்துள்ளது. இதில், சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றார். ஆனால் அது கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை. செய்தி ஊர் முழுக்க பரவ கொள்ளைக்காரர்கள், ரவுடிகள் பணத்தை பறித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், குடும்பத்துடன் ஊரையே காலி செய்து சென்றுவிட்டார். போலீசார் பாதுகாப்பு அளிப்பதாக உத்தரவாதம் அளிக்கவே, நிம்மதியடைந்துள்ளார்.
Similar News
News December 11, 2025
உண்ணி காய்ச்சல் முதலில் இப்படி தான் தெரியும்

<<18527368>>உண்ணி காய்ச்சல்<<>> ஏற்பட்டால், பூச்சி கடித்த இடத்தில் சிவப்பு சிவப்பாக சிறிய தடிப்பு ஏற்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைவலி, காய்ச்சல் இருக்கும். ஆரம்பத்தில் கண்டறியாமல் விட்டால், பூச்சி கடித்த இடத்தில் ரத்தக்கட்டு ஏற்பட்டு, உள்ளுறுப்புகள் செயலிழந்து கோமா, மரணம் கூட ஏற்படக்கூடும். எனவே காய்ச்சல் மற்றும் தடிப்புகள் ஏற்பட்டால் அலட்சியம் காட்ட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
News December 11, 2025
தமிழகத்தில் பரவும் உண்ணி காய்ச்சல்

ஆந்திராவில் ஒட்டுண்ணிகள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் உண்ணி காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் காய்ச்சல் பரவுவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. தினசரி 5 முதல் 10 பேர் வரை பாதிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி உள்ளிட்டவற்றுடன் தடிப்புகள் போன்றவை இக்காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும்.
News December 11, 2025
டி20-ல் ஆதிக்கத்தை தொடருமா இந்தியா?

IND vs SA இடையிலான 2-வது டி20 இன்று நடைபெற உள்ளது. முதல் போட்டியில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்தது. அதை இன்றைய போட்டியிலும் தொடருமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், படுமோசமான தோல்வியை சந்தித்த SA, பழிவாங்க முயற்சிக்கும் என்பதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 5 போட்டிகளை கொண்ட இந்த தொடரில், 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.


