News December 10, 2025
₹1.5 கோடி ஜாக்பாட்.. ஊரை விட்டே ஓடிய குடும்பம்!

பஞ்சாப்பில் கூலி வேலை செய்யும் நசீப் கவுருக்கு லாட்டரியில் ₹1.5 கோடி பரிசு விழுந்துள்ளது. இதில், சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றார். ஆனால் அது கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை. செய்தி ஊர் முழுக்க பரவ கொள்ளைக்காரர்கள், ரவுடிகள் பணத்தை பறித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், குடும்பத்துடன் ஊரையே காலி செய்து சென்றுவிட்டார். போலீசார் பாதுகாப்பு அளிப்பதாக உத்தரவாதம் அளிக்கவே, நிம்மதியடைந்துள்ளார்.
Similar News
News March 9, 2026
ராணிப்பேட்டை: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் வேலை!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <
News March 9, 2026
அமெரிக்கா இங்கு மட்டும் தாக்குதல் நடத்தாது

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல்களை நடத்தினாலும், அந்நாட்டில் உள்ள கார்க் தீவை தொடவில்லை. ஈரானின் கடற்கரையிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள இந்த தீவு, மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி முனையமாக உள்ளது. ஒரே நாளில் 7 மில்லியன் பீப்பாய்கள் ஏற்றும் திறன் கொண்டது. கார்க் தீவை தாக்கினால், வளைகுடா நாடுகளின் எண்ணெய் கட்டமைப்பு மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்பதால் USA தாக்கவில்லை என்று கூறப்படுகிறது.
News March 9, 2026
சற்றுமுன்: முன்னாள் அமைச்சர் காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தலைவருமான கவுரி சாம்ப சிவராவ்(82) காலமானார். உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. 5 முறை லோக் சபா MP ஆக பணியாற்றிய அவர், 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஜவுளித் துறை அமைச்சராக பதவி வகித்தார். கவுரி சாம்ப சிவராவ் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


